சீறும் வெகுளலாய்
கொடுஞ்சினத் தீயாய்
உருத்திரம் உக்கிரமாய்
உறுமும் கொடுவரி கானகத்து நீரிடை நிழல்கண்டு
உருவும் பொய்யாய்
வடிவும் வேறாய்
படியின் மாயமாய்
காணா பகை உறுத்து வந்த மருளின் நிலை ஓர்ந்து
கோண்மா தேடலாய்
உழை கிலியாய்
போத்து நடுங்கலாய்
இரைகொள் முனிவு உவகையோடு பொங்கி பாய்ந்தபற்று
விலகும் கானலாய்
மறையும் காட்சியாய்
மூழ்கும் தரவாய்
குறுக்கை குழம்பி கடுவன் குணத்தொத்து பதுங்கிநோக்கு
மேன்மை கணமாய்
யோகம் உடனாய்
வலியும் மலிவாய்
வயங்கும் வயமா நோகும் நலிவில் தீதும் தனைமறந்து
12 comments:
அருமையாய் இருக்கிறது
அருமையான தமிழ் மொழி கவிதையில் தவழ்கிறது
இப்படிப்பட்ட தரமான கவிதைகள் என் பார்வைக்கு படாமல் போனது எனக்கு கவலை தருகிறது
இலக்கியவாதிகளக்கு மட்டும் கவிதை எழுத வேண்டாம் மேடம்...எளியவர்களுக்கும் எளிய வார்த்தைகளில் எழுதுங்கள்...
சொல்கேளான் ஏ.வி.கிரி
solkelanavgiri.blogspot.com
உறுமும் கொடுவரி - புலி
மருளின் நிலை ஓர்ந்து - மான்
இரைகொள் முனிவு - ?!
கடுவன் குணத்தொத்து - பூனை
வயங்கும் வயமா நோகும் நலிவில் தீதும் தனைமறந்து ,,,!
நன்றி யாதவன், தமிழ் புலவர்.
சின்னப்பயல்
உங்கள் வாசிப்புக்கு நன்றி.
:)
புரியாமைக்கு என் அறியாமையே காரணம்..
கவிதைமிகஅருமை தோழி
/உருவும் பொய்யாய்
வடிவும் வேறாய்
படியின் மாயமாய்
காணா பகை உறுத்து வந்த மருளின் நிலை ஓர்ந்து/
/
அருமை வரிகள்
ரங்கன் எல்லாமே புரிந்துவிடுவதில்லை. நன்றி
பிரபாஷ்கரன், amma வாசிப்பிற்கு நன்றி.
Post a Comment