Monday, February 27, 2012

கலந்த கலவையாய்


நாயுண் தலையாம் அவளாக
வாய் கொள் சதையில் அதுவாக
குதறும் எயிற்றும் அவளில்
கூரில் மிகவும் அதனில்

உகிர் பற்றும் அவனாக
பிடரி கவரும் அதுவாக
மதில் மயங்கிய அவனில்
நேசப் பொய்யாய் அதனில்

குலைக்கும் அவள் நன்றி பயக்கும் அது
மிழற்றும் அவன் உங்கரிக்கும் அது

பகை கண் காணாமல்
அவளில் அதுவாக
நிலை பெயர்த்து துஞ்சும்
அவனில் அதுவாக

பூனை நிறைக்கும் எழில் பூண்டு
அவள் மறைந்த கானகத்தில்

விதி சோரும் வழியாய் திரண்டு
அவன் இகந்த புலத்தில்

குழவி ஒறுக்கும் புத்தறம்
பூசை கவறிய அவளாய்
உயவின் பெருக்கும் முறையில்
ஞமலி கைவரும் அவனாய்

இனமும் தினம் கண்டு
உயிர் கலக்கும் ஓர்மதி