Sunday, April 29, 2012

கூற்றம் முயங்கின்


கூற்றமில் பற்றின் புறத்தில்
வேருற்ற புறம் பற்றாய்
கூற்றம் பதரின் வேரில்
பதராய் பற்றும் ஒளிர
வேராய் ஒளிரும் பதர்
பற்று பதரும் ஒளியில்
கூற்றமாய் வேர் பதரில்
ஒளியும் புறத்தில் வேராய்
பற்றின் வேரில் கூற்றம்
பதர் ஒளிரும் கூற்றத்தில்
வேரின் பற்றும் ஒளியில்
புறம் ஒளிரா பற்றின்
கூற்றம் வேராய் பதரின்
வேர் புறமாய் கூற்றம்
ஒளியின் கூற்றமில் பதரும்
வேரற்ற பற்று புறத்தின்
ஒளிரும் கூற்றத்தின் வேர்

Sunday, April 22, 2012

சுயம் பெறு பருவம்


பரவும் நிலையாய் அகம்
சேரும் கணமாய் தன்னில்
மெய்மை காணும் புறமது
பொய்மை விழையும் சுயத்தில்
மற்றதும் பேசும் மீமிகவாய்
கற்றதும் கூறும் அந்தமாய்
ஆதியில் நிற்கும் குணமது
இயங்கிய விதியில் நோற்பது
நவிந்து கோடலில் மருவாய்
பெற்றிட மேவும் துஞ்சலில்
மற்றிட சாரும் வியந்து
கண்ணியில் கோர்த்து மகிழ
நுண்ணிய இழையில் துகிலாய்
நிறையுமோ குறையில் ஆட
குறையுமோ நிறையில் கூட
தாதியும் மறையும் கனவில்
தந்தையும் அறையும் நனவில்
மேலது மிகையாய் முதிரும்
கீழது நகையில் அடங்கும்
பெரும் பேறாய் சாறும்
பெறலே வேறாய் துவர்க்கும்
முழுதின் பக்கம் திரும்பும்
வதையின் சுகமாய் விரியும்

Sunday, April 1, 2012

வெங்கொடுங்கண்


கட்புலம் கவர்ந்து கண்நிழல் காவலில்
குறிப்பறியும் கோண்மா கொள்ளகம்
திரையிடும் திருஷ்டியும் உட்புக
இரை நிகர் பிடிக்கும் வெட்சியாய்
புறவின் நிழலில் புதைந்து வெருளும்
அதிரும் உழையும் நவ்வியும் துளைத்து
அய்யக்காட்சி புலனில் அறைந்த நோக்கில்
மாயமும் மைப்பாய் மறையும் சீவனம்
உதிரம் விழையும் புன்மையும் தீரா
இமையும் உறுத்தா பொறியாய் கணம்
மினுங்கும் விழியில் பொலிந்து அயர
குன்றிபோல் குழம்பும் எரியில் இட்ட
வேட்டுவன் வலையாய் ஈர்க்கும் செவ்வரி
புழையிடும் அம்பாய் தூர்ந்து சேரும்
குவியத்தின் மையத்தில் மெய்விழி படலம்
மேன்மையும் ஒத்து சாடையில் வீழும்
சிம்மத்தின் திறத்தில் கலந்துருமாறி
வேட்கை வடிக்கும் வெங்கொங்கண்