Sunday, June 24, 2012

அமிழ்து சமைக்கும்


உப்பின் கண்டம்
சேரும் மீனின் சதையும்
நெய் சோறும் கலக்க
புளி சாற்றில் பிசைந்து
வேம்பின் மலர் வாட
நீரில் உறைந்து
நொதிக்கும் பாலில்
கொழுந்தாய் மல்லித்
தாளிட்டு மிளகும் கூடி
பயிரின் கணம் கடைந்து
துவையல் மிக்கூற
பொறிக்கும் கறியும்
சுகம் மணமாய் அலைபாய
இனிக்கும் சுவை இறுதியில்
அமுதின் திறமதனை சாற்ற
ஆலின் ஊண் தொலை தெருள