Sunday, August 26, 2012

அகம் கொள் பொருள்


வண்ணத்தி நீள் பறந்து துடித்து
அமரும் ஆங்கே. சேதியும்
மறைத்து. எவ்வகை திறக்கும்
மறைபொருள் அறிய. திறம்
கொள் புலனும் கையறு காட்டி.
தவம் தரு ஞானம் ஒரு வழிசுட்டி.

பாறை இடுக்கில்
புலர்ந்த மொட்டை
பறித்து தேனும்
சொறிந்த அகமாய்
செறிந்த குருவிடத்து
சேவித்த தருணம்

வண்ணத்தி நிறம் புரிந்தது:மண்ணென்று
வடிவம் தரித்தது:ரௌத்ரமாய்
நிலைத்தது:நீரின் இடத்து

இணைக்கும் பொருளின் சேர்க்கை:
மண் பெரும் ரௌத்ரம் நீராய் மாறுமோ....

மாறியது நிலமும் ஆடி
கொண்டது பேரலையாய்....

Monday, August 20, 2012

களிமிகு நடம்


பாவைக் கூத்தும்
காண வந்ததில்
அரவும் ஒன்று
ஆங்கே கவர்ந்துற்று
தானும் நடமிட
ஆவல் கொண்டே
பிளந்த வாயில்
மெல்லென கவ்வி
பேதையை விழுங்க
ஆட்டம் குலையா
உடம்போடு பாம்பும்
களிமிகு தாண்டவம்
கடந்து கூட
தன்மதி மறந்து
கூத்தில் பொங்க
சீறும் நாகம்
வீசிய மலர்க்கொடி
ஆடும் நடனம்
சர்ப்பமாய் மாறி
பதுமையின் உயிரில்
ஊறும் விடம்

Sunday, August 12, 2012

விடம் கண்டு


வண்ணத்தி பறந்து படபடத்து சுற்றும் எம்மை.
இன்பமும் துன்பமும் கண்டு நிறம் மறைந்து கூடுமது.
எம்மில் நுடங்கும் எம்மில் துவளும். எம்மில் மீளும். கனவிலும் நிறைக்கும்.
அன்றும் ஓர் இரவில் விடம் கொண்ட சிறுபறவையாய் இனம் மாறி எம்மை தீண்ட.
கொடும் வலி கூடும் நாளில் கொல்லும் திறமறிந்தும் கொய்யா உயிரை பேணும் யாம்.
குலம் பெருக்கி கோட்டையில் துலங்கும் அது.
நஞ்சின் கடுமை வாட்ட இன்னல் தாக்க குலைவோம் யாம்.
சிற்றுயிரில் சிறுத்து தன் ஆலின் பெருமை கூவி கிளரும் அது.
எம்முன் நேசம் காட்டி தன்னலம் நாடி ஏமப்பு கொள்ளும்.
பிணி பொறுத்து பிழை பொறுத்து வதை பல கண்டு வாட்டமுற்று சாத்துயருற்றும் உயிர் போக்கும் மந்திரம் தானறியோம் யாம்.
எம்மை பிளந்து பெரும் யோகம் திறம் காண விருப்புறும் அது.
இழி பிறப்பு தனை வியந்து போற்றும் நகை கொண்டோம்.
சுருக்கி உடையும் உள்ளமதை தேரும் வழி கண்டோம்.
திருவின் நிறையில் பொலிவிக்க திருவுளம் பெற்றே.