Sunday, November 25, 2012

மீண்டும் எழும்


-தீபிகை தூண்டி கிளம்பிய சுடரில் எழுந்தது பெருநிழல்
-புகையாய் உருப்பெற்று பெரு வடிவெடுத்தது கூளி எனும் நெருப்பு
-உரும் எனும் ஓசை பெருக தகித்தது விசும்பு
-திடும் எனும் ஒலி கொண்டு வெடித்தது நிலன்

அச்சத்தால் குறுகும் பேதை புகை வெளியில் நீண்டு தன் விருப்பும் செப்பினளே

-உயிர்பேணும் ஐயம் வெறுமையாய் போக
-மூச்சும் நிறுத்தும் வேட்கை மடைமாற
-அவாவும் துன்பம் உறவின்றி நீள
-இச்சையும் இனி இவ்வுலகத்து நீக்கமுற

போரெதிர்ந்த வெளியில் இடியன்ன நகையாய் அதிர்ந்து தெய்வம் பற்றியதை கூற

-தசையும் கூழாய் வடியுமோ என்பின் உருவில் நிலைய
-காற்றும் வருடாது தணலும் வேகாது நீரும் தணியாது இருக்க
-அல்லதை நடாத்தி வினை செய்விக்க ஊடாடி
-ஆதியில் விளைந்த அரும்பழத்தை பிசையவே

பால்பொருள் திரிந்த உடல் பெற்று பிரதிமை கலையும் உயிர் கொண்டு துய்த்த மொழி

-பச்சையும் குலையுமோ கானகத்து
-புள்ளும் இணை மறக்குமோ
-மீண்டும் கல்லாய் சமையுமோ
-யுகம் பின் கடந்து வெடிப்பின் முன் சேருமோ

அருளும் தீதும் அறியா தொகை நிலை தன்னில் எழுத்தும் ஒலியும் இன்மையாய்