Sunday, September 9, 2012

எம்மையும் உம்மையும்


உன்
ஒரு முகத்தின்
பாரா கணத்தில்
நிலைகொள்
இடும்பையோடு
பிரியும்
வளைவாய்
நெடுக
நீரின் நிறம்


என்
உரு அகத்தின்
புரியும் தருணத்தில்
அலையும்
களித்துயிலில்
சேரும்
பரப்பாய்
குறுக
குருதி வண்ணம்

நின்
சிறுபுறத்தின்
சிதறா காலத்தில்
கலையும்
உழந்து
கலப்புடன்
மையத்தில்
பொழியும் நிறமற்று

எம்
பெரு வெளியின்
குவிந்த பொழுதில்
இரங்கலில்
குழைவாய்
கிடையில்
விளிம்பில்
நாறி சாயமற்று

Sunday, September 2, 2012

தொடரல்


நீல வண்ணத்தி
தேன் கவர்ந்து
மலைமுகட்டில் உயரே
பறந்து படபடத்து
மகிழும் சேதி
கோர்க்க தருவின்
நிழல் கூடியமரத்து
பொன் வண்ண அரவும்
ஊறி மொட்டின்
வாசம் முகர
விடத்தின் காற்று
விரட்டியது சிற்றுயிரை
பூத்தேடி தளிர்நாடி
மெல்லிதழ் நடுங்க
நீலக்கமலம் புக
மலர் நுகர்ந்து
பேரின்பம் பெற்றிடவே
குளம் கண்டு
பாம்பும் தொடர
நீருள் மூழ்கி
தாமரை வேர்
பின்னி தளரும்
மூச்சை நிறுத்தி