Sunday, March 17, 2013

ஓவியமாய்


காட்சி புனைந்து
மலை சூழும் நிறமும்
கலந்து மழை முகிலும்
கவிந்திருக்க

தூரிகையில் மானாய்
படிந்திருந்த வண்ணம்
உருவும் நிறைபெற்று
முகிழ்த்தது குருஎனும்
துலக்கமுளதான்
வரியதனை மெய்யென்றே
உகளும் புரிபடா
உலகில்

தாதைக் குறித்த
காதையதுவே

சிறுநெஞ்சில் விரிந்த
புலமாய் இணையிலா
பேருவகை மூளுமோ
என்றென்றும் அருகில்
நிலைத்திருக்கும்
அழியா சக்தி
மீட்டெடுத்த கனவாய்
நனவின் படியில்
நாதகானம் துறவின்
துவர்ப்பில் குழவியின்
கண்ணுற்ற தெய்வதமே