Tuesday, April 16, 2013

உயிராக்கம்


                                        குலுங்கும் சிறு கிளையில்
                                        துடித்துப் பார்த்தது சிறுகுருகும்
தலைகீழ் காட்சியாய்
      நீர்மேல் மலையும்
         அருவிமேல் விருட்சமும்
             விருட்சத்தில் முளைக்கும் விசும்பும்

தீப்பறவை போல் மிதந்து வந்த
பொறி கொள் மீன்
பற்றியது வனத்தை
வதனமும் கதற
மறைந்தன சிற்றொலிகள்

துரத்தும் அனலைத் தாண்டி பறந்தது காக்கும் வெளி தேடி-

       ஆட்டம் நிகழ்ந்தது
       குருவியின் நிழலொன்று
       கூத்தும் கூவ
       பாவைகள் பலவும்
       தொடரும் விதியில்    
       கூவலும் ஓரினமாய்
       அறிதலும் ஒருமையாய்

பதுமைகள் இணைந்து பல்லுயிர்
பெருக்கி ஒற்றை வடிவில்
இறையின் இறையுமாகி
சேவித்தார் அருளதனை
புதைக்கும் சிறுகல்குருவி இடத்து

Monday, April 8, 2013

பாயும் ஒளி


பிறக்கும் பிறிதொரு உயிராய்
(விழிமலர்ந்து)
இருப்பும் யாவின் உட்பொருளாய்
(விரிவும் பாவை ஒளி கூடா)
வியக்கும் திறம் எவரறிவதாய்
(துணையும் சேராது)
தானமர்க்கும் தமதல்லேம் நவில்வதாய்
(பற்றாமலும் மேவி)
சுடர் வாங்கி பொலியும்
(இறுகும் எவ்வம்)
அலமரும் உடம்போடு பிரிந்திருக்க
(தவிப்பும் ஏக)
அயரும் கண்ணும் குவிந்ததாய்
(உயவும் வலித்து)
மாயத் தீயின் வெந்தணலில்
(கொடும் மூச்சும்)
மணலும் சுகிக்கும் பகலாய்
(வட்டமிடும் பருந்தும்)
ஆலத்தின் விழுததனை விடுத்து
இன்மையும் உள்வாங்கும் செவியில்
(பாயும் ஞாயிறுடன்)