Sunday, April 20, 2014

சித்திரம் தாங்கி

புலன் வகையும்
உரு வடிவும்
இருப்பும் தருணமும்
உள்மூச்சின் நிறமும்
வேதியியக்கம் அனைத்தும்
செலுத்தி அண்டத்தில் பரவ

நிகழ்ந்தது ஒளிரூப சேதியில்
படிந்தது ஞாலத்தின் வெளியில்

வயலும் நகர்ந்தது
தண்டும் சுழல
பயிரும் வளைந்து
சித்திரமாய் பெருவரைவில்
உணர்ந்திட்ட பொருளாய்

பொறி என சிறுத்து
உள்கிடக்கும் சோதியை
கிளரும் எழுச்சியாய்
அகரும் புறமும் ஒன்றாகி
விண்மீனும் கோளும்
தாங்கி செறித்து
நனவின் குழைவில்
வழிந்து பயணித்து
அலையும் கோடாய்
அசையும் இயல்பாய்
மருளும் பொற்பும்
விசித்திர கோர்வையின்
வினைமுற்றும் கொள்வதாகி
வான் எனவும் அடி உலகாகவும்
பிரிந்தறியா புதுசமனில்
பெயரும் சுட்டாது
அவதாரக் கனியில்