tag:blogger.com,1999:blog-28785742706067564232024-03-04T22:31:07.552-08:00Mubeen SadhikaMubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-51215529754689181242015-12-29T04:44:00.000-08:002015-12-29T04:44:04.219-08:00இயல் நிலைஎம்மனதின் ஊஞ்சல் கயிறு பிணைத்திழுத்த சகோரத்தின் கழுத்தில் தடம் பதித்த உருவாய் வலியும் தீரா திக்கில் உதிரும் செண்டின் தோற்றவாய் காணா கிடைத்தொழுக்கம் திரண்ட பதியமதில் முழ்கும் முளைவிடா யோகத்தருணமது உம்மை கொணரும் நுண் புள்ளி வீழுமோ அக்குளத்தின் அங்கணச் சேற்றில் ஆதிவிடம் கரைநிறை முயக்கும் கள்ளோடு தேமதுரச் சாறும் தூது செல்லா வளியின் பின்னே விரைந்தோடும் சக்கரத்து தேர்க்காலில் இட்ட பலாச்சுளை மிஞ்சா தீரத்தில் எம்மை என்புறுவாய் ஆக்கிட்ட இச்சை சொடுக்கும் கணத்தில் தேயும் ஆறலை மெய்யும் வருந்தா தினவோடு உம்மில் அமிழும் கரைசலில் விலகுமோ கோர்வை கொள் உப்புநீர் சொறியும் விழிகோளத்து சேர்வையில் தொலையும் நிழல் விதிரும் இதழ் சேரா மருட்கை அலையும் எமது அவயமறு ஆதாரத்தின் சின்னமாய் சிக்கி கசியா உமது கருங்கல் ஞாலத்தில் பிரியுமோ உளமெனும் சாறும் உயிரெனும் கூடும்.Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-45342926911239048702015-09-14T01:27:00.000-07:002015-09-14T01:27:09.388-07:00பெயரிலா நினைவில்வட்டச் சுழல் ஆடி<br />
வனைந்த குமிழில்<br />
இறகும் புக<br />
ஊசி முனை<br />
வளியும் நுழைய<br />
படபடக்கா சிறகின்<br />
அசைவும் சிரத்தில்<br />
கொண்டு அசைய<br />
வண்ணம் ஒட்டிய<br />
சுவரில் ஒளிவீழ<br />
காப்பும் எடையாய்<br />
மலரா வாசம்<br />
ஈர்க்கும் புலனாய்<br />
வீச்சின் துவர்ப்பில்<br />
இறுகும் விடியும்<br />
கோர்த்த உடனுறை<br />
மௌனம் விரிய<br />
அரிவரி ஆகும் என<br />
அனலிலும் வாடா<br />
குளிரிலும் நடுக்கா<br />
அவ்வமயச் சாத்திரத்தில்<br />
ஓர் சருக்கம் என்றே<br />
புரளும் தற்கூற்று<br />
வேட்டலில் மேன்மையும்<br />
இகத்தின் நற்சான்றாய்<br />
பெயரும் நிறம் கூட்டிMubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-58772410479643632892015-08-30T23:18:00.001-07:002015-08-30T23:22:35.331-07:00இசை பகர்ந்துதுருவத்து மீனும்<br />
கோளின் நிகர்<br />
ஆழத்துளையின்<br />
செம்மை நீளும்<br />
புனல் சேர்ந்த<br />
ஓடை பாய்வதில்<br />
நாவியும் ஓடி<br />
மென்ஒலி இசையும்<br />
பெருக்கெடுத்துப் பகர<br />
வினையாவும்<br />
சமைந்து கூம்ப<br />
பெருங்கனிக் கூட்டம்<br />
தேன் சொரியும்<br />
மலர்ப் பொய்கை<br />
ஈர்க்கும் சுவனத்து<br />
இம்மையின் பெற்றியில்<br />
வேற்றசைவும்<br />
முறுக்கேறி பதிய<br />
சாக்காடு நோகா<br />
துயரத்தில் சார்ந்து<br />
முற்றிடும் கோவைMubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-83912119767350790952015-04-20T22:57:00.000-07:002015-04-20T23:09:18.197-07:00கானகத்துக் கூட்டம்நதி வேகம் தாளாது<br />
மானும் குழுவாய்<br />
நீரில் மிதந்து<br />
அளைந்து அணைத்து<br />
நீந்தி புறம் சேர<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> பெருவெள்ளப் புள்ளியில்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> சிக்கி சுழன்ற பிணை<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> தனித்து தவித்து<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> தான்மட்டும் கடந்து<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> வேறு கரை காண<br />
<br />
பச்சை கானகத்து<br />
கூட்டம் மறைய<br />
ஈரம் நனைய<br />
ஓசை வந்தடையும்<br />
திசை நோக்கி<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> அச்சம் தின்று<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> அலறும் முனைப்பும்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> இனம் தேடி<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> பாயும் பேரரவம்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> பதுங்கி ஒடுங்க<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
தம் இணை பாரா<br />
தளிரும் விருப்புற்று<br />
தயங்கும் தேடலில்<br />
தொடரா வினையோடு<br />
விளையும் வெறுப்பில்<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> விழி சோர்ந்து<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> இமை மூடி கனத்து<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> குரலும் ஓய்ந்து<br />
தாகம் பெருக்கி<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> ஓடையில் குளிர<br />
<br />
எதிர் முனை காட்டும்<br />
துணையின் நிழலில்<br />
துள்ளித் தாவி<br />
இடர் தவிர்த்து<br />
அகம் கொள்ள<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> கொடுமா பின் வர<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> அகலவும் இயலா<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> நிலை நிற்றல்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> உயிர் விடுத்து<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> ஊண் பசியாற<br />
<br />
தோல் போர்த்தும்<br />
விளையாட்டில் கூடி<br />
பிளக்கும் வலி<br />
பெயர்த்து மலிய<br />
நிரல்மிசை வழுக்கும்<br />
<div>
<br /></div>
<br />
<br />Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-57456237611474263502015-04-05T23:32:00.003-07:002015-04-05T23:32:58.562-07:00துயர் அலைஇளஞ்சிவப்பு மொட்டும் விரிய<br />
துயர் அலை பரப்பி புதரில் கவிழ<br />
இணை மகிழ் தாவரத்தின் முளைப்பில்<br />
துதி தேடி வளரும் செம்மலர் பூக்க<br />
முள்ளின் முடிவிலா கூரில்<br />
கிளைத்த காதை மதி மயக்கும் என<br />
விருத்தத் தொடரில் ஈட்டி சேமித்து<br />
பித்தின் களியில் புகுத்தி ஏமுற<br />
குருதிச் சிவந்த பூவின் கிளையும்<br />
வரும் விசித்திர கோண்மையின் நிழலாய்<br />
மறக்கும் விழைவில் விடுப்புற்று<br />
பேசிய செடியின் ஒலியைக்<br />
கோர்த்து அசையும் இட்டு நிரப்பி<br />
பிரிவுள் கூடி மடிந்த ஓர்மை<br />
இழை பிரிந்து தோதாகி ஓத<br />
பிராயம் கனிந்து வளர்பெறும்<br />
கூடின் பூடாய் தரித்து முதிரMubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-45960633099130661512015-03-29T23:21:00.002-07:002015-03-29T23:21:45.009-07:00இருப்பென்னும் இன்மைஇருப்பென்றும்<br />
இன்மையென்றும்<br />
இருப்பாகி நின்று<br />
இன்மை யனைய<br />
இருப்பில் நிகர<br />
இன்மையும் பகர்ந்து<br />
இருப்பும் இலங்க<br />
இன்மையில் பதிந்து<br />
இருப்பை ஈர்க்க<br />
இன்மை யச்சம்<br />
இருப்பில் கரைந்து<br />
இன்மை சார்பில்<br />
இருப்பென்னும் இன்னதும்<br />
இன்மையின் உன்னதம்<br />
இருப்பை நவில<br />
இன்மை வலிந்து<br />
இருப்பில் உளதும்<br />
இன்மையில் சிலதாய்<br />
இருப்பைக் கலந்து<br />
இன்மையில் கழிந்து<br />
இருப்பின் முதுமை<br />
இன்மையில் கனிய<br />
இருப்பின் களைப்பு<br />
இன்மையில் முகிழ<br />
இருப்பின்மை இயலMubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-30668133709696149902015-03-23T23:38:00.001-07:002015-03-23T23:38:39.546-07:00சிறு மென் உலாவல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
குழறும் நாவில் மிழற்றும் பதங்கள்<br />
வண்ணக் குவியல் பொதிந்த பளிங்குத்<br />
தாழியினுள் முரலும் வண்டும்<br />
சுவற்றில் மோதி ஒலி எழுப்ப<br />
தனித்து பயணிக்கும் செம்மகள்<br />
நீலக்கண்ணால் ஒளியை உமிழ<br />
ஆழியின் அடியில் வெண்மணல்<br />
நலிய பறக்கும் வட்டின் விசை<br />
இசையில் ரீங்கரித்து நீள்கூந்தல்<br />
உருவொன்று இடைப்பட<br />
வெறியும் களியும் புகுந்தாட்ட<br />
கனிவின்றி மிரளும் சிறுபேதை<br />
கருமலர் பறித்து வீசும் கணம்<br />
அருவம் பாய்ந்து குழல் பற்றி<br />
இடியின் பேரரவத்தில் கூவ<br />
அச்சம் உதிர்ந்து சாந்தமும்கூடி<br />
நவமையப் புள்ளிகளில் தூண்டி<br />
கரையும் மின்னலாய் நகர்ந்து<br />
காந்தப் புலமும் சுருளும் பாதையில்<br />
ஒற்றும் உலாவி சோதி பெருக்கி<br />
நீரில் அலை சுழற்றி கவசத்தில் நின்று<br />
புல்லும் ஆதியாய் விகாரமும் ஈறாய்<br />
பல் வடிவப் புடை பெயர்வில்<br />
சிறுமென் பகையும் தவறி வீழ<br />
முளைத்த பிறப்பு யாவும் தொடர் அலர்தலில்</div>
Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-23953429962992152822015-03-15T23:19:00.002-07:002015-03-15T23:19:50.317-07:00புலன் மருவிநுட்பச் செதில்<br />
செவி மருவி<br />
ஒலித்துகள் காண<br />
கூர் விழியும்<br />
குழையாய் விளங்க<br />
ஓசையும் பார்வையும்<br />
முயங்கி விரவ<br />
கேளலும் காணலும்<br />
இணங்கி இணைய<br />
முப்புலம் ஒருங்கே<br />
உள் ஆழம் புனைந்து<br />
அகத்தின் புலனாய்<br />
நீளும் வீணில்<br />
சருகின் உயிராய்<br />
கூம்பும் காதும்<br />
கண் எனச் சிறுத்துMubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-16770280510665583462015-03-01T22:03:00.001-08:002015-03-01T22:03:31.276-08:00விதியாய் நினைவும்நிகர் சமன் பெற்றிருக்க<br />
பல்லாயிரம் கிளவியும்<br />
இச்சூத்திரம் கொண்டதறிந்து<br />
புலன்சார் புவியின்<br />
அழுத்தம் மேல் மிகத் தணிய<br />
உயிர் மிகச் சேர்ந்து<br />
மெய் மிக பாரித்து<br />
எச்சம் எனவும் முற்று எனவும்<br />
விதி வகுத்தும் பகுத்தும் கோர்த்தும்<br />
விரிக்கின் வரி நீளும் ஒலிப்படுத்தி<br />
உவர்ப்பதாங்கு ஒளியின் தூரிகையில்<br />
மீட்டும் துறையின் பான்மை<br />
சொல் சருக்கம் புரிந்தமைந்து<br />
வியங்கும் அளவையும் காலமிலதாய்<br />
சமயம் அழியும் நிலவுதலில்<br />
வழமை பாரா நியதியும்<br />
நினைவும் ஓர்மையும் புகுந்து கூராக்கMubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-63930595313309792112015-02-24T22:06:00.002-08:002015-02-24T22:06:42.180-08:00பேருருவச் சித்திரம்பெரும் பாதம் பதிய<br />
மலை முகட்டு சிரத்தை<br />
அசைத்து குனியும்<br />
பல்லாயிரத்து உயிர்<br />
கடுகு சிறுத்த உணவும்<br />
உள்ளங்களை நீளலும்<br />
காணாத அகல்வாய்<br />
பிளந்து கல்உருளும்<br />
ஓசையில் எயிறும் சேர<br />
உறக்கம் கனிய<br />
ஊர்ந்து சரிய<br />
கருநிழல் அண்டத்தில் வீழ<br />
பகுதியாய் உள்ளொளியில்<br />
உருவும் விளக்கம் பெறாது<br />
ஒற்றை நிமிரலில்<br />
கிரகங்கள் தாண்ட<br />
பாறை நகரும்<br />
சாயை விளம்பும் மாயத்தில்<br />
<br />
உகிர் ஒன்று மரமானதாய்<br />
என்பும் உயர் கோபுரமாய்<br />
தொகுக்கும் சான்றுகள்<br />
திகிரியின் அடுக்கமாய்<br />
பிழைத்தது எச்சமாய்<br />
சுருங்கியது குணத்தினதாய்<br />
அரவமும் பேச்சாய்<br />
விடமும் சிந்தையாய்Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-36558694907938451952015-01-04T22:11:00.003-08:002015-01-04T22:11:56.263-08:00முள் நிறமிழந்துமுள்ளின் நிறமும்<br />
மலரின் மணமும்<br />
கோரிப் பெற்றன<br />
மகிழ்வின் மணத்தை<br />
நேசத்தின் குணத்தை<br />
பரிவின் நுகர்வை<br />
பெரும் ஒலிகொண்டு<br />
மீட்டிட இனத்தின்<br />
பான்மை சொல்லும்<br />
பொருளில் அல்லாது<br />
இனிமையில் நிகழ்ந்து<br />
புலன் யாவும்<br />
ஈர்த்ததாய் விளம்பி<br />
மானத்தின் நுனியில்<br />
அற்றமும் கவிழ்ந்துMubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-52331524627632918762014-12-21T22:08:00.002-08:002014-12-22T02:17:28.776-08:00வெப்பம் சூழ்ஆழம்கோளத்தின் உரு<br />
பெருவெப்பம் சூழ்ஆழம்<br />
தனிக்குவியம் எரியும்<br />
நீர்மத்தின் கலவை<br />
குணம் கூடி வழிய<br />
திசை ஏதும் இன்றி<br />
பரவும் திரவமாய்<br />
குகையின் வழி துளை<br />
கொண்டு பறக்க<br />
வான் கடந்து வகை<br />
பெற்று மீண்டு நீள<br />
அந்தமில் லோகம் என<br />
இடம் முற்றாக<br />
ஆதியின் காலமாய்<br />
விசும்பு வருடும் வளி<br />
போற்றும் நெறியாக<br />
அலை மூலம் தெளிவித்து<br />
தொலை நிகழ் புரிவதாய்<br />
கூர்ந்து வியங்குறு<br />
வழியும் கூறாய்<br />
இணைந்து பயிலMubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-4821532987250698292014-12-14T22:09:00.000-08:002014-12-14T22:09:10.195-08:00இசை எல்லை எனும் ஆக்கம்நேசத்தில் குருவிகளின் கீச்சொலி<br />
ஏட்டில் ஒலிப்பதாய்க் கேட்க<br />
சின்னக் கிள்ளைகளாய் மிழற்றும்<br />
இசையும் அறியாத ஓசையென<br />
கானமாய்ப் பதிந்திருக்க<br />
வனம் கொள் மாதும்<br />
மாயப் பறவையின் நிறம்<br />
ஒன்றைப் பாடி நிற்க<br />
துயர் எனும் குரலாய்<br />
காவியத்தில் சங்கமிக்கும்<br />
மென்மைதனை செப்பி<br />
கின்னரகீதம் பொழியும்<br />
பெயர் அறியா புனைவுப் பட்சி<br />
எனவே புலம்பும் பாவின்<br />
சங்கீதச் சருக்கம் நகும்<br />
புள்ளின் கனவது எனும்<br />
கவியின் பேரெல்லை<br />
கண்டும் கேட்டும் உண்டும்<br />
உயிர்த்தும் உற்றறிந்தும்<br />
செவ்வனே விட்டுவிடுதலையாகி<br />
அடைக்கலமாகுமோ இயல்பின்<br />
பாற்பட்ட ஆக்கத்தில்Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-55351581532605830682014-12-07T22:02:00.000-08:002014-12-07T22:02:00.556-08:00பதம் விளைந்த கவிசொல் உண்டு<br />
ஊண் எழுதி<br />
எயிற்றின் கடையில்<br />
தான் எனச் சிக்கி<br />
விரல் ஊடாய் ஒளியும்<br />
பிரித்தது நீர்மமோ நிறமோ<br />
குருதி கனத்து வழிய<br />
பதிந்தது சுவடியில்<br />
எண்ணாயிரம் எழுத்தாயிரம்<br />
கண்ணும் மயக்கி<br />
உருவென கொண்டு<br />
திணைசார் விருந்தாய்<br />
திகட்டா அலகுடன்<br />
தூற்றா பொருளில்<br />
வேட்டலம் பாய<br />
தறிவிடுத்து கோர்வையில்<br />
நிலைமாறி விதந்து<br />
வினைமேவும் காலை<br />
சுயமும் மோகித்து<br />
சுகமாய் பாவித்து<br />
பேச்சும் இன்றி<br />
முழு சிந்தையும் பயின்று<br />
உறியப் பெற்றது<br />
சக்கையினும் கீழாய்<br />
சரிந்திட்ட பதமென<br />
காணும் ஓர் கவியில்Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-60494793825254971492014-11-30T22:23:00.000-08:002014-11-30T22:23:26.424-08:00வனம் சிலிர்க்கும்கூர்வேனில் குத்தும் தணல்<br />
வெண்மதி தொடரும் பின்னந்தி<br />
முகில் நிழல் மறைக்கும் பாதை<br />
செவ்வண்டு இசை ஒலிக்கும்<br />
பாதை துவளும் கொடியும் நுடங்கி<br />
இலையும் உதிர்ந்து சலசலக்க<br />
முயல் துள்ளி மரம் புகும்<br />
கோண்மா நதி பாய்ந்து தளர<br />
மின்னலென ஒளிரும் அணங்காய்<br />
கிளை தாவி கூவென கூவ<br />
அதிரும் பட்சியும் அடங்கி குமுற<br />
சில்லென்னும் வளியும் பெயர<br />
கானமும் செவியுறாது முடங்க<br />
அடர் வலி போக்குமோ ஆரிருள் தனித்துMubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-30328884631171584952014-11-23T22:26:00.002-08:002014-11-23T22:26:26.415-08:00உயிர் நிகழும் பருவம்முற்றத்து நெடிதுயர்ந்து<br />
கிளை பரப்பி நீள<br />
செம்மலர் வளர் பருவம்<br />
நகைத்து முரணாக்கி<br />
தளிர் இலை சொறிந்து<br />
விடுதலை யுணர்த்தி<br />
செப்பும் அலையில்<br />
வளி மீதுலாவி<br />
இடர் அறிந்து<br />
அகத்தின் வாசம்<br />
மெல்லியதாய் பகிர்ந்து<br />
இளம் முறுவல் அறிய<br />
முகம் யாதென்று<br />
காணா வளைவில்<br />
படிந்தது குணம்<br />
பச்சையின் இயல்பாய்<br />
இரவில் செழித்து<br />
ஒளியில் செறிந்து<br />
எண்கோடி அணுவும்<br />
மண் பிரிந்த நீராய்<br />
வேரின் பிடிப்பில்<br />
நிலைத்திருப்பதாய்<br />
நகரும் கனவும்<br />
உய்விப்பதாய்<br />
அடரும் கானகம்<br />
விருப்பின் புள்ளியாய்<br />
வான் மறைத்து<br />
இருளின் துணையுற்று<br />
முளைத்த கணம்<br />
இதுவென் திளைக்க<br />
<br />
ஏட்டில் விளைந்ததாய் கனிந்ததாய் வர்ணிக்கும் இவ்வுயிர் நிகழும் தருணம் யாவிலும் நிறையும் என பரிணமிக்க.Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-79163806960447452242014-11-03T20:52:00.001-08:002014-11-03T20:52:32.250-08:00புள்ளின் அசைவுமண்ணில் புதைந்த<br />
சிரத்தை மீட்டு<br />
வானின் மையத்தை<br />
தேடும் அலகுடன்<br />
சிறுமென் நடைநடந்து<br />
துள்ளும் மீனைக்கவ்வி<br />
இயல்பென் ஆக்கத்தில்<br />
தம்மையும் இணைத்து<br />
மேகத்தின் அசைவதனை<br />
மெய்யில் ஏற்றி<br />
தன்னில் பிரிந்த<br />
தனதின் நிழலும்<br />
விசும்பில் படிந்ததாய்<br />
வினை பயின்று<br />
தானும் தன் பிம்பமும்<br />
பரிமாண வெளியில்<br />
அலையும் பேற்றினை<br />
வடிப்பதனை பாவை<br />
இயற்றும் திறம்யாதென<br />
புள்ளின் மொழியில்<br />
பெயர்த்து புகல்வதும்<br />
பொருளின் சான்று<br />
எனவே கிளைத்து<br />
வரித்தது இங்கண்Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-67053478758578784032014-10-26T22:48:00.003-07:002014-10-26T22:48:54.657-07:00உம் எனும் ஓசைத்துளிஓர் பொருள் ஓர் நிறை<br />
பாவின் உள்ளில்<br />
ஊற்றெடுக்கும்<br />
கவியின் கலி<br />
<br />
ஓர்மையில் சிரத்தையும்<br />
மேலாய் கீழாய்<br />
இடமாய் வலமாய்<br />
அசைத்தும் நகர்த்தும்<br />
சொல் விளையாட்டு<br />
என குறுக<br />
<br />
உறக்கமும் மேவிடாது<br />
இரையும் ஆட்டுவித்து<br />
கிடக்கை அறிவிக்கும்<br />
பூனையின் மெல்லொலி<br />
<br />
சிறு பூவும் மலர<br />
மகரந்த விதியின்<br />
செறித்தலோடு ரீங்கரிக்கும்<br />
மென்பொன் வண்டாய்<br />
உருவகித்து<br />
<br />
சலிக்கும் பொருண்மை<br />
யாவும் சலித்து<br />
மரபின் உசாப்பு<br />
தவிர்த்து இலங்கி<br />
இங்கு அளபெடையில்<br />
வரிந்திருக்கும் ஓசைத்துளிMubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-72575748309831562662014-10-06T00:01:00.001-07:002014-10-06T00:01:31.358-07:00நீதியின் செலவாய்...சருமத்து மீட்டிய<br />
சுகித்து முயங்கும்<br />
கருவியின் சிணுங்கலில்<br />
எதிர் முனை குவியும்<br />
தன் நயப்பை வழிய<br />
உறியும் எண்கணித<br />
வாய்ப்பாடும் தடைபட<br />
கேளலும் களிப்பாய்<br />
சொன்மையும் உள்சுழிப்பாய்<br />
இன்கண் என்றே ஒலித்து<br />
ஆட்டம் துவங்கி<br />
உச்சத்தின் இறுதிவரை<br />
சொப்பன உயவில்<br />
உள்ளின் உள்ளில்<br />
மானத்தை மீட்காத<br />
வலியின் நுகர்சாயல்<br />
ரூபத்தின் பிளவதனை<br />
தவிர்த்து விலக்கி<br />
பொய்யன்ன புனையும்<br />
போகச் சருக்கம்<br />
நீதியின் செலவாய்<br />
தீர்த்தலில் மிகும்Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-45274159976296411262014-09-21T22:54:00.001-07:002014-09-21T22:54:41.946-07:00பயணித்து...நீள்கோடாக நீண்ட<br />
வெண் புள்ளிகள்<br />
இணைகையில்<br />
இரு ஞாயிறும்<br />
சில கிரகங்களுமாய்<br />
ஒரு குடைவிரிந்த செடி என<br />
உணர் பொருள் மறுத்த<br />
எந்திரத்தின் இயக்கமாய்<br />
அகப்பேச்சின் சாரத்தில்<br />
ஒளிப்பயணம் பூண்டு<br />
சங்கிலித் துளையில் புகுந்து<br />
யாச்சொல் அணைத்து<br />
ஆயுதமும் கூட்டாய்<br />
இறுதியின் உள்ளில்<br />
காணும் அறிவதன்<br />
புலனை மறைத்து<br />
நனவும் துவண்டு<br />
ஒற்றை எழுத்தின்<br />
மடிப்புடன் தொடங்கி<br />
பெயரிட்ட இழிவின்<br />
வசப்பட்ட ஞானமாய்<br />
காலமும் நின்று<br />
பின் பயணித்து<br />
புவியின் மையம் குவிய<br />
ஈர்ப்பை மாற்றி<br />
திசையும் பிறழ<br />
வடிந்தன புலவின்<br />
மீக்கூறும் வினையாவும்<br />
வளைந்தது வேற்றின்<br />
உருவமாய் ஒரு கூற்றம்Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-37670709476014929902014-09-14T23:06:00.002-07:002014-09-14T23:06:46.764-07:00குமிழிகுமிழியும் பறக்க இடைவிடாது<br />
வளியின் வழியில் தொடர<br />
உள்ளும் புறமும் நிரம்பிய காற்று<br />
நீரைச் சுமந்து ஆவியின் துளியில்<br />
<br />
நீர்மத்தில் மிதக்கும் குமிழியும்<br />
வளி உட்கொண்டு சிறுகச்சிறுக பெருத்து<br />
கண்ணின் உள்விழி என மாறி<br />
உள் கவிந்து கலக்கும்<br />
<br />
உமிழும் நீரில் ஓரு குமிழி<br />
உள்ளின் சொல்லாய் கிளம்பி<br />
வெளியின் வளியாய் உள்புகுந்து<br />
உண்ணும் இன்மையின் பொருளெனMubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-2268735086711211432014-09-07T22:41:00.000-07:002014-09-07T22:41:16.919-07:00ஞாயிறும் பிறக்கஅருகா மருங்கில்<br />
அவ்விரி அக்கதிர்<br />
அச்சிறு அம்பலம்<br />
அகலும்<br />
<br />
இருள் ஒழியும்<br />
இத்திற நிறத்தின்<br />
இவ்வையகத்தில்<br />
இருந்தவம்<br />
<br />
உச்சியில் நிலவும்<br />
உயிர் உருக்கும்<br />
உவப்பில் சிவக்கும்<br />
உரத்தில்<br />
<br />
எழும் பகல்<br />
எழும்நிறை<br />
எருவாய்<br />
எரியும்<br />
<br />
ஐம்புனல் ஓதும்<br />
ஐயங்காண்<br />
ஐம்புவனத்து<br />
ஐவனத்தில்<br />
<br />
ஒளியின் ஓர் கீற்று<br />
ஒற்றை வானில்<br />
ஒருமை காண்<br />
ஒருங்கண்Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-31360191266587721032014-08-31T23:43:00.003-07:002014-08-31T23:43:37.517-07:00நெறி வழிபசுமை அடர் குழைவும்<br />
உருவிச் சேரும்<br />
இலையதில்<br />
<br />
பொன்பூசி வளைந்ததில்<br />
பதியும் வடிவாய்<br />
மலரதில்<br />
<br />
நீன்மை வளமார்ந்து<br />
ஒழுகிப் பெருக<br />
விசும்பதில்<br />
<br />
அழலும் பொரிந்து<br />
விடிந்து பரவ<br />
ஞாயிறதில்<br />
<br />
புகையும் கவிந்து<br />
உள்ளில் கலக்க<br />
இரவதில்<br />
<br />
குளிரும் அடங்கும்<br />
இதமும் பெயர்ந்து<br />
புலமதில்<br />
<br />
பவளம் நாண<br />
பாயும் திறமாய்<br />
குருதியதில்<br />
<br />
நுரையாய் மிதக்கும்<br />
சகலமும் பெருகிய<br />
மதியதில்<br />
<br />
சாம்பலும் துவரியும்<br />
துகளாய்ச் சேரும்<br />
நெறியதில்Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-15701868398401918202014-08-25T00:21:00.001-07:002014-08-25T00:21:13.977-07:00வீணில் உடல்தோயும் உடல்<br />
தனித்தென பிரிய<br />
ஆர்ப்பரிக்கும் சுழிப்பு<br />
சுற்றும் வட்டமாய்<br />
நீரும் குருதியும் கலந்து<br />
நீர்த்தலாய் வழிய<br />
ஓர்மையும் சரிதமும்<br />
பிணங்கிக் கூட<br />
பிளவுற்ற புலன்<br />
நிரக்கமாய் சமைய<br />
இடையில் ஊடாடும்<br />
மூதின் பருவம் என<br />
கடக்க மறுத்து<br />
துடிப்பில் சில்லென்<br />
சிலிர்ப்பும் வடிந்து<br />
பெயர்த்துச் சிதறிய<br />
இரு கூறென கண்டு<br />
கவின் கரைந்து<br />
இளகும் நிணமென<br />
பிம்பமும் பொலிய<br />
நகைப்பின் சித்திரமாய்<br />
கோரச் செண்டும்<br />
இதழ் பிய்ந்து குதற<br />
ஞானம் செப்பும் சிமிழாய்<br />
துலங்கும் வீணில்Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2878574270606756423.post-90318764746965131512014-07-27T22:51:00.002-07:002014-07-27T22:55:47.479-07:00யாமற்றதுஎம்மை ஞாலத்தின் மீதமர்த்தி<br />
வரித்துச் செப்பிய உருக்கோளமாய்<br />
மையத்து தொகுப்பிலும் மிதந்து<br />
உணர் இழை நீண்டு அண்டம் சுருட்ட<br />
உலகு தாங்கிய பாரம் காணாது<br />
அரற்றும் ஆங்கொருவன் மிரண்டு<br />
பால்வெளியும் கடந்து ஒளியும்<br />
பீறிட்ட சிறுதுளை வழி பயணித்து<br />
பாதம் எட்டும் மீனில் பதிந்து<br />
விண்வரைவாய் வேகம் கொண்டு<br />
கதிர் தாண்டி சூளும் துகள் மீண்டு<br />
பல் சராசரங்கள் உள் கவர்ந்து<br />
பருமளவின் பரிமாணத்தகலத்து<br />
பரவி பெருகி விரிந்து அகண்டு<br />
பற்றிழையில் யாம் கரைந்தும்<br />
நிரப்புவித்தும் நிறைந்தும் நிலாவியும்<br />
ஒர் குமிழில் அடைபட்டு பிளவுற்றும்<br />
எம்மில் இருமையாய் பன்மையாய் விளைய<br />
பிறக்கும் எழுத்தும்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தோன்றும் எண்ணும்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அறியாத இயலின்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அடையாளதிதல் ஒன்றாய்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வேறாய் பலதாய்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>எம்மை வனைந்து<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>எம்மை புனைந்து<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>யாம் மறைந்த பிறிதின்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>திரிபுற்று பொருள்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வழியை நவில்ந்து<br />
<span style="white-space: pre;"> </span>தொடர் பெயர் சுட்டும்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>கோர்த்து விதியும்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>எச்சமாய் வகுத்து<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வினையும் செயல்பட<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அறிந்திரா நன்மொழியில்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>யாம் வடிந்திட<br />
எம்முள் அந்நியமாய்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஒதுங்கும் யார்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இச்சொல் நிகண்டை<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தருக்கிச் சேர்ப்பது<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>என துருவத்தின் முனையிலும்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>புரளும் காலத்தின் முடிவிலும்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வினாவ எம்மில்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>காணா விடையும்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>எம்மின் பதிலியாய்<br />
<span style="white-space: pre;"> </span>முதிரும் யாமற்றது<br />
<br />Mubeen Sadhikahttp://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.com2