Monday, May 27, 2013

வாள் புரியும் வலி


இடையில் துண்டான உடலாய்
பிரிந்து
சேரும் காயம் ஒட்டும் நினைவிலியில்
கண்டு
கோளமாய் விலகி எடை கூடும்
விசையும்
வாள் பாய்ந்த நீளமும் வலியின்
நிழலற்று
கொடும் புதிராய் அகத்தில் சிக்கி
நசியும்
மூச்சும் உழன்று வளி காணா
பாதையில்
மின்னலின் திறமதனை உணர்த்தும்
உயவில்
மிதக்கும் துகளாய் எண்ணக்கீற்று
படிய
ஒலியற்ற வெளியில் பயணிக்கும்
பொறியென
முடிவிலா புள்ளியில் நிறைவுறும் புலனாய்
அறிய
புகைந்த கனவும் பலன்றற யோகத்தில்
கரைந்து
அடியும் நகர நிறைகொண்ட
புதைவில்
சிதறிய திவலையாய் சோர்வுறும் இனத்தின்
குணமதை
தவறா திட்டமாய் நோயும் பரிந்து
வதிய
துணையும் கூடி மரிப்பில் விதந்து
சாய

No comments: