Tuesday, February 24, 2015

பேருருவச் சித்திரம்

பெரும் பாதம் பதிய
மலை முகட்டு சிரத்தை
அசைத்து குனியும்
பல்லாயிரத்து உயிர்
கடுகு சிறுத்த உணவும்
உள்ளங்களை நீளலும்
காணாத அகல்வாய்
பிளந்து கல்உருளும்
ஓசையில் எயிறும் சேர
உறக்கம் கனிய
ஊர்ந்து சரிய
கருநிழல் அண்டத்தில் வீழ
பகுதியாய் உள்ளொளியில்
உருவும் விளக்கம் பெறாது
ஒற்றை நிமிரலில்
கிரகங்கள் தாண்ட
பாறை நகரும்
சாயை விளம்பும் மாயத்தில்

                       உகிர் ஒன்று மரமானதாய்
                       என்பும் உயர் கோபுரமாய்
                       தொகுக்கும் சான்றுகள்
                       திகிரியின் அடுக்கமாய்
                       பிழைத்தது எச்சமாய்
                       சுருங்கியது குணத்தினதாய்
                       அரவமும் பேச்சாய்
                       விடமும் சிந்தையாய்