Sunday, June 5, 2011

குமையும் மந்திரத்தில்

குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்

வண்ணம் வளையும்
வேர்முகிழ் இலையில்
மந்திரத் துகிலும்
மாந்தரின் அயிராய்
துளைத்த செங்குருதி
லச்சினையின் இருமை
புகலும் துதியில்

குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்

சதி மண்டும்
சித்திர விண்ணில்
மீள்புகா ஒருகண்
குமையும் கரத்து
சீவனே மண்ணுரைக்கும்
பீலி நெருடும்
பெறா புரவியின்

குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்