Sunday, June 24, 2012

அமிழ்து சமைக்கும்


உப்பின் கண்டம்
சேரும் மீனின் சதையும்
நெய் சோறும் கலக்க
புளி சாற்றில் பிசைந்து
வேம்பின் மலர் வாட
நீரில் உறைந்து
நொதிக்கும் பாலில்
கொழுந்தாய் மல்லித்
தாளிட்டு மிளகும் கூடி
பயிரின் கணம் கடைந்து
துவையல் மிக்கூற
பொறிக்கும் கறியும்
சுகம் மணமாய் அலைபாய
இனிக்கும் சுவை இறுதியில்
அமுதின் திறமதனை சாற்ற
ஆலின் ஊண் தொலை தெருள

Sunday, April 29, 2012

கூற்றம் முயங்கின்


கூற்றமில் பற்றின் புறத்தில்
வேருற்ற புறம் பற்றாய்
கூற்றம் பதரின் வேரில்
பதராய் பற்றும் ஒளிர
வேராய் ஒளிரும் பதர்
பற்று பதரும் ஒளியில்
கூற்றமாய் வேர் பதரில்
ஒளியும் புறத்தில் வேராய்
பற்றின் வேரில் கூற்றம்
பதர் ஒளிரும் கூற்றத்தில்
வேரின் பற்றும் ஒளியில்
புறம் ஒளிரா பற்றின்
கூற்றம் வேராய் பதரின்
வேர் புறமாய் கூற்றம்
ஒளியின் கூற்றமில் பதரும்
வேரற்ற பற்று புறத்தின்
ஒளிரும் கூற்றத்தின் வேர்

Sunday, April 22, 2012

சுயம் பெறு பருவம்


பரவும் நிலையாய் அகம்
சேரும் கணமாய் தன்னில்
மெய்மை காணும் புறமது
பொய்மை விழையும் சுயத்தில்
மற்றதும் பேசும் மீமிகவாய்
கற்றதும் கூறும் அந்தமாய்
ஆதியில் நிற்கும் குணமது
இயங்கிய விதியில் நோற்பது
நவிந்து கோடலில் மருவாய்
பெற்றிட மேவும் துஞ்சலில்
மற்றிட சாரும் வியந்து
கண்ணியில் கோர்த்து மகிழ
நுண்ணிய இழையில் துகிலாய்
நிறையுமோ குறையில் ஆட
குறையுமோ நிறையில் கூட
தாதியும் மறையும் கனவில்
தந்தையும் அறையும் நனவில்
மேலது மிகையாய் முதிரும்
கீழது நகையில் அடங்கும்
பெரும் பேறாய் சாறும்
பெறலே வேறாய் துவர்க்கும்
முழுதின் பக்கம் திரும்பும்
வதையின் சுகமாய் விரியும்

Sunday, April 1, 2012

வெங்கொடுங்கண்


கட்புலம் கவர்ந்து கண்நிழல் காவலில்
குறிப்பறியும் கோண்மா கொள்ளகம்
திரையிடும் திருஷ்டியும் உட்புக
இரை நிகர் பிடிக்கும் வெட்சியாய்
புறவின் நிழலில் புதைந்து வெருளும்
அதிரும் உழையும் நவ்வியும் துளைத்து
அய்யக்காட்சி புலனில் அறைந்த நோக்கில்
மாயமும் மைப்பாய் மறையும் சீவனம்
உதிரம் விழையும் புன்மையும் தீரா
இமையும் உறுத்தா பொறியாய் கணம்
மினுங்கும் விழியில் பொலிந்து அயர
குன்றிபோல் குழம்பும் எரியில் இட்ட
வேட்டுவன் வலையாய் ஈர்க்கும் செவ்வரி
புழையிடும் அம்பாய் தூர்ந்து சேரும்
குவியத்தின் மையத்தில் மெய்விழி படலம்
மேன்மையும் ஒத்து சாடையில் வீழும்
சிம்மத்தின் திறத்தில் கலந்துருமாறி
வேட்கை வடிக்கும் வெங்கொங்கண்

Sunday, March 4, 2012

கலவா பிறப்பில்


நான்காய் கால்கொண்டே
மென்பாதம் பொருத்தி
அடியும் நிறை காணா
நடைபழகும் ரகசியத்தில்
பூனையுட் புகுந்த அவளும்
புதுப்புனலறிந்து செறியும்
கரம் நீள கால் பாவும்
சிரம் எழ தோள் கடுக்கும்
குரல் மடுக்க நாபுரளும்
நிணம் சுவை கொடுக்கும்
தன்னில் பிரியா அகம் மறுக்கும்
சீராட்டும் உளமோடு
பிரிந்தும் கூடியும் இணையாய்
மரமேறி கீழ்பாயும்
ஆறறிவும் சுருங்கி உவளும்
குணமொத்து தானறியும்
இம்மையின் இரட்டை
மறுமையின் பன்மையாய்
சிறுத்து மடியும் ஊழின்
வினை வழிச் செல்லும்
போதம் அறியா பேடு
மோகம் தவித்து கடுவன்
தேடும் விழா நாளில்
இறுமாந்து துணைகொள்ள
நுகர்தல் போக்கி பற்றும்
விடுத்து யாசகம் செய்யும்
அறமகள் காண் அவ்விலங்கே

Monday, February 27, 2012

கலந்த கலவையாய்


நாயுண் தலையாம் அவளாக
வாய் கொள் சதையில் அதுவாக
குதறும் எயிற்றும் அவளில்
கூரில் மிகவும் அதனில்

உகிர் பற்றும் அவனாக
பிடரி கவரும் அதுவாக
மதில் மயங்கிய அவனில்
நேசப் பொய்யாய் அதனில்

குலைக்கும் அவள் நன்றி பயக்கும் அது
மிழற்றும் அவன் உங்கரிக்கும் அது

பகை கண் காணாமல்
அவளில் அதுவாக
நிலை பெயர்த்து துஞ்சும்
அவனில் அதுவாக

பூனை நிறைக்கும் எழில் பூண்டு
அவள் மறைந்த கானகத்தில்

விதி சோரும் வழியாய் திரண்டு
அவன் இகந்த புலத்தில்

குழவி ஒறுக்கும் புத்தறம்
பூசை கவறிய அவளாய்
உயவின் பெருக்கும் முறையில்
ஞமலி கைவரும் அவனாய்

இனமும் தினம் கண்டு
உயிர் கலக்கும் ஓர்மதி

Sunday, January 22, 2012

வலை இழை


கவ்வி...
கதுவி...
சிக்கி..சிதறி..இடறி...
ஒற்றி..ஒருங்குகூடி...

வலையும் அலையும்
படையும் தடையும்
இணையும் இழையும்

நூலாய்...
திரியாய்...
பின்னி..சுற்றி...முறுக்கி...
கட்டி...கைப்பற்றி...

சிரமும் கொட்டும்
காலும் எட்டும்
இடையும் கட்டும்

ஆலம்...
நீலம்...
கருத்து...சிறுத்து...ஒறுத்து...
பகுத்து...துயருறுத்து...

மனை சுழலும்
இரை தேரும்
நிலை புரக்கும்

விட்டு..
பிடித்து...
பழித்து..
வினைமுடித்து...உமிழ்ந்து
கயிறும் திரித்து...நூல் மையத்து
விழித்து...