சிரம் பிளக்க வலி உடைத்து
உறவும் சிதறி துண்டாக
அன் எனவும் அள் எனவும்
பிரிந்து நிகராகா முயக்கத்தில்
இருமையும் சேரும் புள்ளி
இணையற்று கூடிக் குறைய
ஓர் குறி மாறி மறுபிறப்பும்
அணிந்து உலவா சதுக்கத்தில்
கானமும் மறைந்து குருதி தெறிக்கும்
சூத்திரம் பாய அணையா
வெள்ளமன்ன பெருகி துயர் என
விரிந்து உயவுக் கடலில்
நடமிட முகைந்து பறக்கும்
கழுகாய் சிறகொடிந்து மீனின்
இரை புகும் கொள்வாய்
சேதம் காணும் அகம் புகலும்
கனத்து ஒறுக்கும் புலன் பரிவை
Sunday, February 23, 2014
Sunday, February 9, 2014
ஓர் பொறி நகும்
பொறி இயங்கும்
ஆரம் பலதாய்
வட்டுச் சுருக்கம்
ஓடும் நிழற்பாதை
குவிவது போன்மை
விலகும் பான்மை
எண் கணிக்கும்
பார்த்தலற்ற விழி
பழகியது வடிவம்
இருள் சேர்க்க
ஒளி பிளக்க
தீதாய் மாறிய
திரை மயக்கம்
உணர் சித்திர
மறைவதில் கலந்து
நகும் வேள்வி
வரம் என்று
காட்டி அல்லதை
ஓம்பி செயல்
பகுக்கக் காணும்
ஓர் இடர் புகுந்து
பெருவலி சுகித்து
அற்றது வரின்
ஆரம் பலதாய்
வட்டுச் சுருக்கம்
ஓடும் நிழற்பாதை
குவிவது போன்மை
விலகும் பான்மை
எண் கணிக்கும்
பார்த்தலற்ற விழி
பழகியது வடிவம்
இருள் சேர்க்க
ஒளி பிளக்க
தீதாய் மாறிய
திரை மயக்கம்
உணர் சித்திர
மறைவதில் கலந்து
நகும் வேள்வி
வரம் என்று
காட்டி அல்லதை
ஓம்பி செயல்
பகுக்கக் காணும்
ஓர் இடர் புகுந்து
பெருவலி சுகித்து
அற்றது வரின்
Sunday, January 26, 2014
வயங்கும் பருவங்கள்
பவளப் பருவம்
வேனில் முற்றும் காயாய் பூத்தது
கனியாய் முதிரும் சுகமாய் விளைந்தது
செங்குருதி முத்தாய் சமைந்ததில்
கானும் சடங்காய் அமைந்தது
அந்தருவப் பருவம்
பூஜ்யத்து நித்திரை கோசம் பெருக
தபசும் அனுபோத மருவத்தில் கோர்த்து
புகவிளங்க பூஜை ஆயும் மந்திரத்தில்
உன்னத பொற்பலமும் இலங்குவதில்
உணர் பருவம்
பாக்கியமும் மலர்ந்த ரோகணத்தில்
பையுள் முகிழும் திரண்ட யுகத்தில்
சர்ப்பம் விரையும் கமலச் செண்டில்
சரசமாடா பஞ்ச லோகத்து
புனர் பருவம்
மஜ்ஜை கலையும் கோண் முகில்
உற்பவித்த தாழ்பதி மண்டிலம்
மாச்சரியம் சூழ் மேவுலகு பண்பட்டு
விகற்பமும் தாண்டி லயத்தின் சொப்பனமாய்
புதை பருவம்
கூர்மம் புனைந்த பெருவெளி கோளம்
மன்னும் மீனும் இந்திர விஜயத்தில்
தயை துவர்ந்து தரங்கம் அதிர
வேணுவும் கானமாய் முரலும் வாக்கில்
வேனில் முற்றும் காயாய் பூத்தது
கனியாய் முதிரும் சுகமாய் விளைந்தது
செங்குருதி முத்தாய் சமைந்ததில்
கானும் சடங்காய் அமைந்தது
அந்தருவப் பருவம்
பூஜ்யத்து நித்திரை கோசம் பெருக
தபசும் அனுபோத மருவத்தில் கோர்த்து
புகவிளங்க பூஜை ஆயும் மந்திரத்தில்
உன்னத பொற்பலமும் இலங்குவதில்
உணர் பருவம்
பாக்கியமும் மலர்ந்த ரோகணத்தில்
பையுள் முகிழும் திரண்ட யுகத்தில்
சர்ப்பம் விரையும் கமலச் செண்டில்
சரசமாடா பஞ்ச லோகத்து
புனர் பருவம்
மஜ்ஜை கலையும் கோண் முகில்
உற்பவித்த தாழ்பதி மண்டிலம்
மாச்சரியம் சூழ் மேவுலகு பண்பட்டு
விகற்பமும் தாண்டி லயத்தின் சொப்பனமாய்
புதை பருவம்
கூர்மம் புனைந்த பெருவெளி கோளம்
மன்னும் மீனும் இந்திர விஜயத்தில்
தயை துவர்ந்து தரங்கம் அதிர
வேணுவும் கானமாய் முரலும் வாக்கில்
மந்திரச்சிமிழ், ஆகஸ்ட் 2013- ஜூலை 2014 இதழில் வெளியான கவிதை.
Thursday, January 9, 2014
அகம் மற்றும் ஒரு முகம்
வளைந்தன கோடுகள்
முனை உரசி சரிய
மேலும் உயர்ந்து சரிந்து
கீழும் வீழ்ந்து நுடங்கி
வட்டமோ ஆரமோ
வில்லும் அல்லாமல்
கொடியும் போலே
விழியும் நேராய்
நிமிர்ந்த செருக்காய் நாசியும்
சற்றும் குவிந்து
இரு பிறை நெளிவென
இதழ்களும் பிரிந்து
இறுகும் கன்னம் தழைய
அகலும் நுதலும்
அடர் கூந்தல் கலைய
ஆடியின் பிம்பமாய்
சுடர் பொலிந்த முகமும்
சித்திரத்தில் வேறாய்
மெய்யென மறைத்து
மற்றை யாதொரு
அகத்தில் துலங்கிடவே
முனை உரசி சரிய
மேலும் உயர்ந்து சரிந்து
கீழும் வீழ்ந்து நுடங்கி
வட்டமோ ஆரமோ
வில்லும் அல்லாமல்
கொடியும் போலே
விழியும் நேராய்
நிமிர்ந்த செருக்காய் நாசியும்
சற்றும் குவிந்து
இரு பிறை நெளிவென
இதழ்களும் பிரிந்து
இறுகும் கன்னம் தழைய
அகலும் நுதலும்
அடர் கூந்தல் கலைய
ஆடியின் பிம்பமாய்
சுடர் பொலிந்த முகமும்
சித்திரத்தில் வேறாய்
மெய்யென மறைத்து
மற்றை யாதொரு
அகத்தில் துலங்கிடவே
Monday, December 30, 2013
மற்றும் இணை மாறி
ஒன்றும் மற்றதுமாய் ஆதியில் நிலைகொள்ள
கண் மற்றும் ஓர் இணையாய்
செவி இரண்டென வகுத்து
உயிர் பிரிவதில் வேறாய்
வளியில் கலப்பினும் பற்றியது மற்றாய்
வாழ்தலினும் காணாது மாயத்தில்
சாதலினும் மறையாது காலத்தில்
விரவி பரவும் அடுத்த பரிமாணம்
உயிரற்றதாய் விலகிய பரிணாமம்
ஒற்றை மொழிதலில் சமனமடைந்து
கலைந்த பார்வையும் கரைந்த கேளலும்
வழிந்தது அரை முகம் கோணலுற்று
துடிப்பற்ற உடலும் குறுகி
என்பும் மறைந்து நரம்பும் முறிந்து
கல்லுமற்ற கனமுமற்ற புதுவடிவில்
ஞானம் கண்டது உணர்வின் குறிப்பை
அசைவற்ற சிந்தை அறிவது உட்பொருளை
புறமாய் இயங்கிய இருப்பின் கனிவை
ஈர்க்காது இறுகிய உக்கிர பருண்மை
கண் மற்றும் ஓர் இணையாய்
செவி இரண்டென வகுத்து
உயிர் பிரிவதில் வேறாய்
வளியில் கலப்பினும் பற்றியது மற்றாய்
வாழ்தலினும் காணாது மாயத்தில்
சாதலினும் மறையாது காலத்தில்
விரவி பரவும் அடுத்த பரிமாணம்
உயிரற்றதாய் விலகிய பரிணாமம்
ஒற்றை மொழிதலில் சமனமடைந்து
கலைந்த பார்வையும் கரைந்த கேளலும்
வழிந்தது அரை முகம் கோணலுற்று
துடிப்பற்ற உடலும் குறுகி
என்பும் மறைந்து நரம்பும் முறிந்து
கல்லுமற்ற கனமுமற்ற புதுவடிவில்
ஞானம் கண்டது உணர்வின் குறிப்பை
அசைவற்ற சிந்தை அறிவது உட்பொருளை
புறமாய் இயங்கிய இருப்பின் கனிவை
ஈர்க்காது இறுகிய உக்கிர பருண்மை
Sunday, December 22, 2013
கனவுச் சாத்திரம்
இரவுப் பறவை
உமிழ்ந்த நெருப்பில்
கனவும் கலைய
இறுதிக் காட்சி
சொடுக்கிய நினைவில்
எருதின் கழுத்தை
பிணைத்த அரவும்
ஓலமிட்டு நகைக்க
புத்தொளி வீசிய
மணிக்கல் செம்மையில்
வெம்மை மறைய
குரலொன்று எழும்பி
கொடிபுரளும் மண்ணில்
நீரும் வற்றி
நிலைத்தாங்கு இன்றி
பிளக்கும் புவியில்
உயிர்காணா சாத்திரம்
தினம் பயிலும்
திறமதனை ஓதும்
உமிழ்ந்த நெருப்பில்
கனவும் கலைய
இறுதிக் காட்சி
சொடுக்கிய நினைவில்
எருதின் கழுத்தை
பிணைத்த அரவும்
ஓலமிட்டு நகைக்க
புத்தொளி வீசிய
மணிக்கல் செம்மையில்
வெம்மை மறைய
குரலொன்று எழும்பி
கொடிபுரளும் மண்ணில்
நீரும் வற்றி
நிலைத்தாங்கு இன்றி
பிளக்கும் புவியில்
உயிர்காணா சாத்திரம்
தினம் பயிலும்
திறமதனை ஓதும்
Sunday, December 8, 2013
பரிதவிக்கும் இனம்
உளமோடு பதிந்தது பெயரும்
உவப்பாய் கொள்ளும் ஒலியிலும்
உணர்வெனும் பொருளின்மையாய்
கண்ணால் உட்புகும் மௌனத்தில்
சுற்றித் திரியும் மேயும் தாவும்
உணவும் பிணியும் அறிந்தது
இனமாய்ச் சேர்ந்தாலும் ஒன்றறியாது
மாவென்றழைக்கும் மொழிமாற்றி
உருவகித்து உள்ளும் உருவேற்றி
நுவல்தல் மட்டும் வேறுபட்டே
அத்துணை குணமும் நிறமின்றி காட்ட
உயர்வும் காணாது தாழ்வும் வீழாது
இயல்பும் மாறாது ஜீவன் என்றே
ஓம்பும் திறமதனை உடன் பெற்று
கடைபட்ட உயிரெனினும் தணியாது
மறைபொருள் புரியாது உலவி
சூதும் சூழ்ந்து சுரத்தில் பொதிய
தவமென்னும் உக்கிரத்தில் இறுதியாய்
அடர்ச்சுவடு ஆடிப்பரித்து மேவ
இன்னும் விடாது விலங்கிடை அணியும்
புதைந்து மையமாய் உவர் பெறின்
உவப்பாய் கொள்ளும் ஒலியிலும்
உணர்வெனும் பொருளின்மையாய்
கண்ணால் உட்புகும் மௌனத்தில்
சுற்றித் திரியும் மேயும் தாவும்
உணவும் பிணியும் அறிந்தது
இனமாய்ச் சேர்ந்தாலும் ஒன்றறியாது
மாவென்றழைக்கும் மொழிமாற்றி
உருவகித்து உள்ளும் உருவேற்றி
நுவல்தல் மட்டும் வேறுபட்டே
அத்துணை குணமும் நிறமின்றி காட்ட
உயர்வும் காணாது தாழ்வும் வீழாது
இயல்பும் மாறாது ஜீவன் என்றே
ஓம்பும் திறமதனை உடன் பெற்று
கடைபட்ட உயிரெனினும் தணியாது
மறைபொருள் புரியாது உலவி
சூதும் சூழ்ந்து சுரத்தில் பொதிய
தவமென்னும் உக்கிரத்தில் இறுதியாய்
அடர்ச்சுவடு ஆடிப்பரித்து மேவ
இன்னும் விடாது விலங்கிடை அணியும்
புதைந்து மையமாய் உவர் பெறின்
Subscribe to:
Posts (Atom)