அள்ளெனும் சாரியை ஈராய் வந்த வாசகம்:
சேர்தலும் விலக்கும் இரங்கலும்
நல்லிழைதலும் என்றே கூடி
ஒருங்கு குவித்த எம் நிலை
தவிப்பில் வாடி சுருங்கும் காயமாய்
புரிந்திட்ட ஒழுங்கென இயைபென்றானதுவே
அன்னெனும் சாரியை ஈராய் வந்த வாசகம்:
வண்ணத்துப் பூச்சியாய் பறந்து
கண்ணிலும் அகத்திலும் ஆடி எம்
துயர்காணாது தன் விருப்பில் சுமை
கொண்டே விதிரும் சிற்றுயிராய்
சிறகசைத்து திணையாகும் எனவே விதிக்க
அள் ஈராய் மறுவாசகம்:
கரைந்தனள் புலம்பினள் விழிபெருக்கினள்
எனும் காட்சியாய் ஏட்டில் பதியும்
பாவை அன்ன திரியும் உடம்போடு
எவ்விலங்கும் ஈனும் உணர்வினதாய்
விடுத்து புலன் விளக்கும் புதுநெறி பாற்பட்டே
அன் ஈராய் மறுவாசகம்:
எதிர்த்தனன் விதித்தனன் சூடினன்
என்று வர்ணிக்கும் பொருளில்
விரிந்த வடிவாய் ஏற்ற
உறுதியோடு திறம்பட்ட புனைவென
அலையும் மெய்யாய் ஏந்திய இவ்வண்ணம்
அள் ஈராய் ஒரு வாசகம்:
தொடர்புற்றனள் அலையாய் தன்
வடிவும் உருமாற்றி மனமும் விழியாய்
புள்ளியில் கோர்த்து செரிக்கும்
பல்வினை தாண்டி வலி கூட்டி
வளி அடைந்த வானமாய்
அன் ஈராய் மேல் வாசகம்:
குழவி போல் நீரில் அலையும் ஒரு
பயனும் காணாமல் நீந்தி தவிக்கும்
இருப்பில் கடனாய் நின்ற ஒலியாகி
சர்வமும் சரண்டையப் பணியும்
சீவனாய் ஆனதேனோ
Sunday, May 25, 2014
Sunday, May 11, 2014
தகிக்கும்...
நீரில் மறைந்தது பிறை
வளைந்தது நெளிந்தது
ஆடியின் உயிராய்
தகித்தது
வான் கரைந்தது நீர்மமாய்
ஒளித் துண்டு உதிர்த்து
கருத்தது கலைய
வளியும் அசைத்தது
அலையை சுழித்தது
வட்டமாய்ப் பெருக்கி
நிலவைத் தொட்டும்
அண்டாமலும்
உயரத்து சிமிட்டும்
ஆழத்து உருகும்
திங்களின் உடல்
எட்டி நின்று
காயும் தண்ணென்று
வளைந்தது நெளிந்தது
ஆடியின் உயிராய்
தகித்தது
வான் கரைந்தது நீர்மமாய்
ஒளித் துண்டு உதிர்த்து
கருத்தது கலைய
வளியும் அசைத்தது
அலையை சுழித்தது
வட்டமாய்ப் பெருக்கி
நிலவைத் தொட்டும்
அண்டாமலும்
உயரத்து சிமிட்டும்
ஆழத்து உருகும்
திங்களின் உடல்
எட்டி நின்று
காயும் தண்ணென்று
Sunday, April 20, 2014
சித்திரம் தாங்கி
புலன் வகையும்
உரு வடிவும்
இருப்பும் தருணமும்
உள்மூச்சின் நிறமும்
வேதியியக்கம் அனைத்தும்
செலுத்தி அண்டத்தில் பரவ
நிகழ்ந்தது ஒளிரூப சேதியில்
படிந்தது ஞாலத்தின் வெளியில்
வயலும் நகர்ந்தது
தண்டும் சுழல
பயிரும் வளைந்து
சித்திரமாய் பெருவரைவில்
உணர்ந்திட்ட பொருளாய்
பொறி என சிறுத்து
உள்கிடக்கும் சோதியை
கிளரும் எழுச்சியாய்
அகரும் புறமும் ஒன்றாகி
விண்மீனும் கோளும்
தாங்கி செறித்து
நனவின் குழைவில்
வழிந்து பயணித்து
அலையும் கோடாய்
அசையும் இயல்பாய்
மருளும் பொற்பும்
விசித்திர கோர்வையின்
வினைமுற்றும் கொள்வதாகி
வான் எனவும் அடி உலகாகவும்
பிரிந்தறியா புதுசமனில்
பெயரும் சுட்டாது
அவதாரக் கனியில்
உரு வடிவும்
இருப்பும் தருணமும்
உள்மூச்சின் நிறமும்
வேதியியக்கம் அனைத்தும்
செலுத்தி அண்டத்தில் பரவ
நிகழ்ந்தது ஒளிரூப சேதியில்
படிந்தது ஞாலத்தின் வெளியில்
வயலும் நகர்ந்தது
தண்டும் சுழல
பயிரும் வளைந்து
சித்திரமாய் பெருவரைவில்
உணர்ந்திட்ட பொருளாய்
பொறி என சிறுத்து
உள்கிடக்கும் சோதியை
கிளரும் எழுச்சியாய்
அகரும் புறமும் ஒன்றாகி
விண்மீனும் கோளும்
தாங்கி செறித்து
நனவின் குழைவில்
வழிந்து பயணித்து
அலையும் கோடாய்
அசையும் இயல்பாய்
மருளும் பொற்பும்
விசித்திர கோர்வையின்
வினைமுற்றும் கொள்வதாகி
வான் எனவும் அடி உலகாகவும்
பிரிந்தறியா புதுசமனில்
பெயரும் சுட்டாது
அவதாரக் கனியில்
Sunday, March 2, 2014
கேளா பாடல்
பச்சை வாசம் படர்ந்தாங்கு
குளிர் கடுக்கும் மேகத் துணுக்கின்
ஊடே பெருகும் ஓசை ஒன்று
இனிமையும் தனிமையும் ஒருங்கே
சமைந்த அருவியின் கொட்டுதலாய்
இலைகளின் இடுக்கில் நுழைந்து
பழச்சோலைகளில் பதுங்கிப் பரந்து
தெவிட்டா கானமாய் தொலைவில்
ஒலிக்கும் தேமதுரத் தெள்ளமுதாய்
மேலேறும் உச்சம் வான் உயரம்
வளியில் பூக்கும் கோலமென
கீழிறங்கும் சரளம் நீரின் தண்மையன்ன
சலசலத்து சுழிக்கும் நதியாய்
வனம் நிரம்பும் குறிப்போடு
வர்ணத்தின் ஜாலமாய் சுகமதில்
இணைந்து துயில் கொள்ளும் செவியினில்
கேளா பாடல் குவிமதி இசையாக
குளிர் கடுக்கும் மேகத் துணுக்கின்
ஊடே பெருகும் ஓசை ஒன்று
இனிமையும் தனிமையும் ஒருங்கே
சமைந்த அருவியின் கொட்டுதலாய்
இலைகளின் இடுக்கில் நுழைந்து
பழச்சோலைகளில் பதுங்கிப் பரந்து
தெவிட்டா கானமாய் தொலைவில்
ஒலிக்கும் தேமதுரத் தெள்ளமுதாய்
மேலேறும் உச்சம் வான் உயரம்
வளியில் பூக்கும் கோலமென
கீழிறங்கும் சரளம் நீரின் தண்மையன்ன
சலசலத்து சுழிக்கும் நதியாய்
வனம் நிரம்பும் குறிப்போடு
வர்ணத்தின் ஜாலமாய் சுகமதில்
இணைந்து துயில் கொள்ளும் செவியினில்
கேளா பாடல் குவிமதி இசையாக
Sunday, February 23, 2014
நிகரின்மை
சிரம் பிளக்க வலி உடைத்து
உறவும் சிதறி துண்டாக
அன் எனவும் அள் எனவும்
பிரிந்து நிகராகா முயக்கத்தில்
இருமையும் சேரும் புள்ளி
இணையற்று கூடிக் குறைய
ஓர் குறி மாறி மறுபிறப்பும்
அணிந்து உலவா சதுக்கத்தில்
கானமும் மறைந்து குருதி தெறிக்கும்
சூத்திரம் பாய அணையா
வெள்ளமன்ன பெருகி துயர் என
விரிந்து உயவுக் கடலில்
நடமிட முகைந்து பறக்கும்
கழுகாய் சிறகொடிந்து மீனின்
இரை புகும் கொள்வாய்
சேதம் காணும் அகம் புகலும்
கனத்து ஒறுக்கும் புலன் பரிவை
உறவும் சிதறி துண்டாக
அன் எனவும் அள் எனவும்
பிரிந்து நிகராகா முயக்கத்தில்
இருமையும் சேரும் புள்ளி
இணையற்று கூடிக் குறைய
ஓர் குறி மாறி மறுபிறப்பும்
அணிந்து உலவா சதுக்கத்தில்
கானமும் மறைந்து குருதி தெறிக்கும்
சூத்திரம் பாய அணையா
வெள்ளமன்ன பெருகி துயர் என
விரிந்து உயவுக் கடலில்
நடமிட முகைந்து பறக்கும்
கழுகாய் சிறகொடிந்து மீனின்
இரை புகும் கொள்வாய்
சேதம் காணும் அகம் புகலும்
கனத்து ஒறுக்கும் புலன் பரிவை
Sunday, February 9, 2014
ஓர் பொறி நகும்
பொறி இயங்கும்
ஆரம் பலதாய்
வட்டுச் சுருக்கம்
ஓடும் நிழற்பாதை
குவிவது போன்மை
விலகும் பான்மை
எண் கணிக்கும்
பார்த்தலற்ற விழி
பழகியது வடிவம்
இருள் சேர்க்க
ஒளி பிளக்க
தீதாய் மாறிய
திரை மயக்கம்
உணர் சித்திர
மறைவதில் கலந்து
நகும் வேள்வி
வரம் என்று
காட்டி அல்லதை
ஓம்பி செயல்
பகுக்கக் காணும்
ஓர் இடர் புகுந்து
பெருவலி சுகித்து
அற்றது வரின்
ஆரம் பலதாய்
வட்டுச் சுருக்கம்
ஓடும் நிழற்பாதை
குவிவது போன்மை
விலகும் பான்மை
எண் கணிக்கும்
பார்த்தலற்ற விழி
பழகியது வடிவம்
இருள் சேர்க்க
ஒளி பிளக்க
தீதாய் மாறிய
திரை மயக்கம்
உணர் சித்திர
மறைவதில் கலந்து
நகும் வேள்வி
வரம் என்று
காட்டி அல்லதை
ஓம்பி செயல்
பகுக்கக் காணும்
ஓர் இடர் புகுந்து
பெருவலி சுகித்து
அற்றது வரின்
Sunday, January 26, 2014
வயங்கும் பருவங்கள்
பவளப் பருவம்
வேனில் முற்றும் காயாய் பூத்தது
கனியாய் முதிரும் சுகமாய் விளைந்தது
செங்குருதி முத்தாய் சமைந்ததில்
கானும் சடங்காய் அமைந்தது
அந்தருவப் பருவம்
பூஜ்யத்து நித்திரை கோசம் பெருக
தபசும் அனுபோத மருவத்தில் கோர்த்து
புகவிளங்க பூஜை ஆயும் மந்திரத்தில்
உன்னத பொற்பலமும் இலங்குவதில்
உணர் பருவம்
பாக்கியமும் மலர்ந்த ரோகணத்தில்
பையுள் முகிழும் திரண்ட யுகத்தில்
சர்ப்பம் விரையும் கமலச் செண்டில்
சரசமாடா பஞ்ச லோகத்து
புனர் பருவம்
மஜ்ஜை கலையும் கோண் முகில்
உற்பவித்த தாழ்பதி மண்டிலம்
மாச்சரியம் சூழ் மேவுலகு பண்பட்டு
விகற்பமும் தாண்டி லயத்தின் சொப்பனமாய்
புதை பருவம்
கூர்மம் புனைந்த பெருவெளி கோளம்
மன்னும் மீனும் இந்திர விஜயத்தில்
தயை துவர்ந்து தரங்கம் அதிர
வேணுவும் கானமாய் முரலும் வாக்கில்
வேனில் முற்றும் காயாய் பூத்தது
கனியாய் முதிரும் சுகமாய் விளைந்தது
செங்குருதி முத்தாய் சமைந்ததில்
கானும் சடங்காய் அமைந்தது
அந்தருவப் பருவம்
பூஜ்யத்து நித்திரை கோசம் பெருக
தபசும் அனுபோத மருவத்தில் கோர்த்து
புகவிளங்க பூஜை ஆயும் மந்திரத்தில்
உன்னத பொற்பலமும் இலங்குவதில்
உணர் பருவம்
பாக்கியமும் மலர்ந்த ரோகணத்தில்
பையுள் முகிழும் திரண்ட யுகத்தில்
சர்ப்பம் விரையும் கமலச் செண்டில்
சரசமாடா பஞ்ச லோகத்து
புனர் பருவம்
மஜ்ஜை கலையும் கோண் முகில்
உற்பவித்த தாழ்பதி மண்டிலம்
மாச்சரியம் சூழ் மேவுலகு பண்பட்டு
விகற்பமும் தாண்டி லயத்தின் சொப்பனமாய்
புதை பருவம்
கூர்மம் புனைந்த பெருவெளி கோளம்
மன்னும் மீனும் இந்திர விஜயத்தில்
தயை துவர்ந்து தரங்கம் அதிர
வேணுவும் கானமாய் முரலும் வாக்கில்
மந்திரச்சிமிழ், ஆகஸ்ட் 2013- ஜூலை 2014 இதழில் வெளியான கவிதை.
Subscribe to:
Posts (Atom)