Monday, September 23, 2013

சமன்

பேரவா படைத்த பல்லண்ட புள்ளியில்
நீட்டலும் கோணலும் கொண்ட சமனை
தொட்டிடினும் விட்டிடினும் அகலாது
இடமென காட்டி மாயும் பிராயமும்
காலமென சுட்டி கரையும் பொழுதும்
இடையில் அசையும் அசையா சூத்திரம்
இணையும் தருணமதை முட்டியும்
வகிப்பின் கருத்ததனை நிரலாக்கி
புரியும் கோளில் நாட்டி அடைத்து
மேலாய் கீழாய் இடமாய் வலமாய்
திசையனைத்தும் வட்டமிட்டு பருபத்தும்
வினைபுரியும் மெய்யினை காணாது
அறிந்த அறிவதனை அறிந்தறிந்து
அறியா புதிரை அருவமாக்கி
நீரும் இல்லாது தீயும் கனலாது காற்றும் புகாது
மண்டலத்தின் இயக்கமென பகுத்து
பிறப்பும் இறப்பும் சலித்த ஆர்வத்து
வளியின் உருவாய் மின்னலின் ஒளியாய்
சேரும் ரூபமாய் விளங்கும் இசைவும்
விரியும் துணையும் புகையாய்
ஆதியின் சாத்திரத்தை மீறியும்
அந்தமில் காரணத்து எச்சமும்
மைபுக ஒன்றி மிளிரும் எல்லை
பரிமாண பதிலென தடையிடும் தொடர

Sunday, September 15, 2013

பரவிய பொருளும் சிதறி

பறவையும் வெகுளி கொண்டு
துடிக்க துரத்த அம்பின் குறியாய்
மேல் கீழ் என்று குதிக்க
விரல் நுனி அழுத்தும் விசை
விருப்பின் ஓர் கனியமுதாய்
சித்திரமும் முளைத்து ஆடும்
பொறியும் புதிதாய் சமர்புரிய
வேடிக்கை கீதமும் இசைத்து
ஆதியின் பொருள் பூக்கும் காட்சியாய்
வரைந்த உலகினுள் வனைந்து
திணையும் துறையும் மறைந்து
கதுவ்வும் சீர்கெடு குன்றத்து
வெடிக்கும் படைகலன் அணிந்து
விரையும் சிறு வண்டாய்
அமரும் பெருகும் உருகும்
முழுமுதல் அகமும் ஈடாய்
பெற்றாங்கு பெற்று மிதந்து
வாகை சூடுவது முயங்கும் வார்ப்பின்
வன்கனா பரப்பில் கரையும்
பிம்பமாய்த் தகரும் சேரும்
மதியும் கூர்ந்து பொழுதும் வீணாய்
அறிவும் அழிந்து மண்ணாய்
நாமம் தன்னை மாற்றி தனதாய்
நாளும் தன்னிலை ஆற்றி உளத்தனைய
வடியும் விசித்திர சரகமதாய்

Monday, September 9, 2013

எந்திரமும் அறிவது

எந்திரமாய் வடிவமைத்த பொறி
நெகிழும் காயம் இளகி
ஒலி எழுப்பக் கூவும் குரலென
அலையன்ன உயரும்
உணர்நிலை பெருகும் கோடாய்
ஆடியில் தோன்றும் உருவும்
நிழலாய்த் தொடரும் மாயமென
நகையுள் தொடுத்த நவமெய்ப்பாடும்
அழுத்தும் நொடியில் குதித்து
வழுக்கும் கணம் மரிக்க
மின்னல் மின்னி மறையும் ஒளியாய்
உடன் இருப்பும் கொண்டு
பிரிந்த அணுவும் கூடி காட்சியில்
சேரும் காணாமல் மாறும்
காந்தப் புலமும் ஈர்த்து
திசை பிறழும் கோணம்
உற்றறிந்தது முதல் ஆறினது
வகைமையும் திறமாய் பொதிய
மற்று அறிவன் தெளிதல்
பரப்பும் கூடாய் நடமிடும்
சதையும் குருதியும் இணையா
புது ஆக்கம் என ஒன்றாய்
சரிதம் நினைவில் தேக்கி
நிகழ்வை சூத்திரமாய் அடக்கி
சூதின் பகடைக் குறியோடு
உயர்வதும் தாழ்வதும் வஞ்சத்தை
முனதொகை வைத்து மீட்பின்
நிர்கதியில் உந்தித் தள்ளும்
ஞானப் புதையலென முகிழ்த்தது

Sunday, August 18, 2013

ஆதியும் இயைபுற்று

இலையன்ன வடிவம்
ஒரு கோணம் முடிவுற
பாத்திரமாய் துடித்து
அமுதின் அமுதாய்
கடியதில்

கமழ்ந்த முதிர்வில்
அறிந்தது அயனமாய்
யாசிக்கும் குடத்துடன்
திறந்த வழியதில்
கொப்பாய் மாறி
இயைபுற்று

பிதிர் முதிர்ந்த
பிறவும் பார்க்க
இழை கோர்த்தும்
பரிதவித்த கோசம்
நுடங்கி

இசையதிர்வும் எழும்பி
புகன்ற சாமத்து
துர்வசம் போன
நிட்டை ஒருமா என
விதந்து

தருக்கும் போஜனம்
தந்தறியா சுவனமதில்
கானமும் ஒலிக்க
முள்தைக்கும் விடமோடு
முனகி

லயத்தில் கூடும்
ஓசை இனித்து
சலனமற்று துய்யும்
மீமெய்மிக உகுத்து
பிரணவமாய்

Sunday, August 11, 2013

மலிந்த வேட்கை

கூர்ந்த பாறை
குத்திய தருணம்
இன்பம் போர்த்திய
பெருவலி சுகிக்க
மரிப்பும் இன்றி
உயிர்ப்பும் ஒன்றி
பயிரானது சுவை
சாவென்னும் சாராய்
நொதித்து உதிர
நாவில் ஊறி
ரசமாய் ஓடும்
நதியில் பாய்ந்து
மண் கிளறி
மலை சரித்து
தூபம் அணைத்து
கவின் சிதைய
நெடுவரை யெவ்வம்
பிறப்பும் ஆற்றுவித்து
இறப்பின் வேட்கை
மலியும் திறமென

Monday, August 5, 2013

கரையும்

காக்கும் சொல்லும் கரையும்
பெரு மழை பொழிவில் மண்ணாய்
நீலச்சுழல் ஆழ மாக்கடலின் உப்பில்
துளியின் கணுவில் கலந்த நேசம் போல்
விழுந்து உருண்டு ஆவியாய் நீளும்
விழி வழியில் நிர்கதியாய் தவித்து
பன்னிரு பல்லாண்டும் உறைந்து
அனல் கவ்வி அமிழும் அமிலமாய்
வினை நிகழ்த்தி வண்ணத்தில் பிரிந்து
வானின் வில்லில் சிதையும் நெடிது
ஏதுமற்று துறக்கும் நெறியும் அணைத்து
உளதாய் இலதாய் கண்டு தெளிவித்து
வளியின் நிறம் மூச்சில் இருத்தி
மீனின் போக்கும் உணர்ந்ததாய் கூறி
மரிக்கும் பொழுதைக் குறித்துக் காட்டும்
நாமத்தின் பெயரதில் அடைந்த சித்திரம்
எவ்வம் எனவே வெகுமதி உருவாய்
வருணிக்கும் உரையில் பெயர்ந்த லிபியும்
மறுஉரு கொள்ளும் உயிர் போக்கி நிலைய
பதைக்கும் என ஒல்கி சிலையன்ன
கல்லாய் வடிவெடுத்து நகைக்க

Sunday, June 23, 2013

வாள் மீக்கூறும் கனா

வாளின் கனா கண்டதைக் கூற கூர்முனையில் துருத்திய உடல் காயம் திருத்தும்

இருப்பும் இன்மையும் நிரலாய்
தீட்டிய சேதி அச்சத்தின் பிடியில்
துண்டங்களாய் மாறிய விதி என
இணைவும் சேர்ப்பும் இன்றி
முரசும் அறையும் முடிந்ததை விளம்ப
ணங்கென்றெ ஒலித்த கலப்பில்
தெறிக்கும் மதியும் சித்திரமாய்
பதைத்த குழாம் வெட்டிச் சிந்தும்
படைகலனாய் ஓடிய வீணில்
நாவின் வன்மையாய் உருமாறி
சாய்த்ததும் நுவல்ந்த மொழியில்
வீச்சின் திறம் கொள்வரின்
குத்திய ஆழம் புகன்றதொரு
புனைவும் மீக்கூறி நில்லென்
மாயும் தகையத்து உழந்து
கோடியும் குவித்த புலவில்
வடிந்த கள்ளாய் முயங்கிய
விலங்கென எயிற்றின் துணையோடு
அருங்கும் மருங்கும் துணித்து
மின்னலாய் ஒளிவீசி சோரும்
கைமலிந்த விசை பெருக்கும்
வாகை சூடும் ஒற்றை சொப்பனத்து