ஒன்றும் மற்றதுமாய் ஆதியில் நிலைகொள்ள
கண் மற்றும் ஓர் இணையாய்
செவி இரண்டென வகுத்து
உயிர் பிரிவதில் வேறாய்
வளியில் கலப்பினும் பற்றியது மற்றாய்
வாழ்தலினும் காணாது மாயத்தில்
சாதலினும் மறையாது காலத்தில்
விரவி பரவும் அடுத்த பரிமாணம்
உயிரற்றதாய் விலகிய பரிணாமம்
ஒற்றை மொழிதலில் சமனமடைந்து
கலைந்த பார்வையும் கரைந்த கேளலும்
வழிந்தது அரை முகம் கோணலுற்று
துடிப்பற்ற உடலும் குறுகி
என்பும் மறைந்து நரம்பும் முறிந்து
கல்லுமற்ற கனமுமற்ற புதுவடிவில்
ஞானம் கண்டது உணர்வின் குறிப்பை
அசைவற்ற சிந்தை அறிவது உட்பொருளை
புறமாய் இயங்கிய இருப்பின் கனிவை
ஈர்க்காது இறுகிய உக்கிர பருண்மை
Monday, December 30, 2013
Sunday, December 22, 2013
கனவுச் சாத்திரம்
இரவுப் பறவை
உமிழ்ந்த நெருப்பில்
கனவும் கலைய
இறுதிக் காட்சி
சொடுக்கிய நினைவில்
எருதின் கழுத்தை
பிணைத்த அரவும்
ஓலமிட்டு நகைக்க
புத்தொளி வீசிய
மணிக்கல் செம்மையில்
வெம்மை மறைய
குரலொன்று எழும்பி
கொடிபுரளும் மண்ணில்
நீரும் வற்றி
நிலைத்தாங்கு இன்றி
பிளக்கும் புவியில்
உயிர்காணா சாத்திரம்
தினம் பயிலும்
திறமதனை ஓதும்
உமிழ்ந்த நெருப்பில்
கனவும் கலைய
இறுதிக் காட்சி
சொடுக்கிய நினைவில்
எருதின் கழுத்தை
பிணைத்த அரவும்
ஓலமிட்டு நகைக்க
புத்தொளி வீசிய
மணிக்கல் செம்மையில்
வெம்மை மறைய
குரலொன்று எழும்பி
கொடிபுரளும் மண்ணில்
நீரும் வற்றி
நிலைத்தாங்கு இன்றி
பிளக்கும் புவியில்
உயிர்காணா சாத்திரம்
தினம் பயிலும்
திறமதனை ஓதும்
Sunday, December 8, 2013
பரிதவிக்கும் இனம்
உளமோடு பதிந்தது பெயரும்
உவப்பாய் கொள்ளும் ஒலியிலும்
உணர்வெனும் பொருளின்மையாய்
கண்ணால் உட்புகும் மௌனத்தில்
சுற்றித் திரியும் மேயும் தாவும்
உணவும் பிணியும் அறிந்தது
இனமாய்ச் சேர்ந்தாலும் ஒன்றறியாது
மாவென்றழைக்கும் மொழிமாற்றி
உருவகித்து உள்ளும் உருவேற்றி
நுவல்தல் மட்டும் வேறுபட்டே
அத்துணை குணமும் நிறமின்றி காட்ட
உயர்வும் காணாது தாழ்வும் வீழாது
இயல்பும் மாறாது ஜீவன் என்றே
ஓம்பும் திறமதனை உடன் பெற்று
கடைபட்ட உயிரெனினும் தணியாது
மறைபொருள் புரியாது உலவி
சூதும் சூழ்ந்து சுரத்தில் பொதிய
தவமென்னும் உக்கிரத்தில் இறுதியாய்
அடர்ச்சுவடு ஆடிப்பரித்து மேவ
இன்னும் விடாது விலங்கிடை அணியும்
புதைந்து மையமாய் உவர் பெறின்
உவப்பாய் கொள்ளும் ஒலியிலும்
உணர்வெனும் பொருளின்மையாய்
கண்ணால் உட்புகும் மௌனத்தில்
சுற்றித் திரியும் மேயும் தாவும்
உணவும் பிணியும் அறிந்தது
இனமாய்ச் சேர்ந்தாலும் ஒன்றறியாது
மாவென்றழைக்கும் மொழிமாற்றி
உருவகித்து உள்ளும் உருவேற்றி
நுவல்தல் மட்டும் வேறுபட்டே
அத்துணை குணமும் நிறமின்றி காட்ட
உயர்வும் காணாது தாழ்வும் வீழாது
இயல்பும் மாறாது ஜீவன் என்றே
ஓம்பும் திறமதனை உடன் பெற்று
கடைபட்ட உயிரெனினும் தணியாது
மறைபொருள் புரியாது உலவி
சூதும் சூழ்ந்து சுரத்தில் பொதிய
தவமென்னும் உக்கிரத்தில் இறுதியாய்
அடர்ச்சுவடு ஆடிப்பரித்து மேவ
இன்னும் விடாது விலங்கிடை அணியும்
புதைந்து மையமாய் உவர் பெறின்
Sunday, December 1, 2013
ஒலிக்கும் பொருளாய்
ஓலியாய் நின்றது
உயிரும் ஒலித்ததால்
மெய்யென இசைத்தது
வளியும் சேர்ந்து
அகரம்தான் முதனிலை
அதுவும் இணைந்து
ஓகாரத்தில் ஓசையுடன்
உடல் பருப்பொருளாய்
தெளிந்த உணர்வுடன்
குரலும் வளைய
நாவும் குவிந்து விரிந்து
மூக்கின் துணையோடு
மூச்சின் சேகரத்தில்
உள்ளீடும் அதிர
அண்டத்தின் மோனத்தில்
ஆரவாரித்து அலைபாய
உயிரும் ஒலித்ததால்
மெய்யென இசைத்தது
வளியும் சேர்ந்து
அகரம்தான் முதனிலை
அதுவும் இணைந்து
ஓகாரத்தில் ஓசையுடன்
உடல் பருப்பொருளாய்
தெளிந்த உணர்வுடன்
குரலும் வளைய
நாவும் குவிந்து விரிந்து
மூக்கின் துணையோடு
மூச்சின் சேகரத்தில்
உள்ளீடும் அதிர
அண்டத்தின் மோனத்தில்
ஆரவாரித்து அலைபாய
Sunday, November 24, 2013
அகம் விளக்கும்
மை காயும் எழுத்தின் பொருளாய்
உரத்து ஒலிக்கா நெஞ்சின் இசையென
கண்ணீர் பெருக்கும் முகிலாய்
விடிந்தது மலரில் குவியும் ஒளியன்ன
துள்ளும் மீனாய் வேட்கையில் குதித்து
தளரும் கடலாய் அலையில் மடிந்து
வேடம் கலையும் நிலவாய் நகைத்து
பால்வெளியில் நீந்தி பருகும் பனியன்ன
குணமடுத்த பூசனையும் பெய்து கொய்ய
வனம்கடுத்த வாசமாய் மொய்க்கும் வண்டும்
விழிகாத்த வினையில் வெட்கித்தாழ
பருவம் மாறி இலையும் உதிர்த்து
பாகாய்ப் பெருகிய வெள்ளத்தில் நனைந்து
கனலும் வெகுளியாய் குளிரும் கடுத்து
பழியும் உருவெடுக்கும் அச்சத் துகிலாய்
சிதறும் துளிபோல் ஒருங்கும் குலைய
கண்ணுரு கண்டு களித்த மேனியாய்
குகை போந்து துவளும் கொடியன்ன
முள்ளும் புதராய் நீண்ட பாதையில்
சிறகொடிந்து வீழ்ந்த சிறுபறவையாய்
உவகை பெற்று விருட்டென நகரும்
யாதோ ஏனோ எவ்வுவமையோ
ஈங்கு இவண் நிலை ஈடின்றி சரிய
உரத்து ஒலிக்கா நெஞ்சின் இசையென
கண்ணீர் பெருக்கும் முகிலாய்
விடிந்தது மலரில் குவியும் ஒளியன்ன
துள்ளும் மீனாய் வேட்கையில் குதித்து
தளரும் கடலாய் அலையில் மடிந்து
வேடம் கலையும் நிலவாய் நகைத்து
பால்வெளியில் நீந்தி பருகும் பனியன்ன
குணமடுத்த பூசனையும் பெய்து கொய்ய
வனம்கடுத்த வாசமாய் மொய்க்கும் வண்டும்
விழிகாத்த வினையில் வெட்கித்தாழ
பருவம் மாறி இலையும் உதிர்த்து
பாகாய்ப் பெருகிய வெள்ளத்தில் நனைந்து
கனலும் வெகுளியாய் குளிரும் கடுத்து
பழியும் உருவெடுக்கும் அச்சத் துகிலாய்
சிதறும் துளிபோல் ஒருங்கும் குலைய
கண்ணுரு கண்டு களித்த மேனியாய்
குகை போந்து துவளும் கொடியன்ன
முள்ளும் புதராய் நீண்ட பாதையில்
சிறகொடிந்து வீழ்ந்த சிறுபறவையாய்
உவகை பெற்று விருட்டென நகரும்
யாதோ ஏனோ எவ்வுவமையோ
ஈங்கு இவண் நிலை ஈடின்றி சரிய
Sunday, November 10, 2013
நிகழ்வும் கழியும்
காலம் நின்றது எண்ணில்
பயணித்தது நிலையாய்
பரிணாமமாய்
நிலையற்றதில் பற்றோடு
மாறிய சேர்க்கை
ஒரு கோணம் காட்டி
குலுங்கியதில் பிரிந்து
மறு வடிவம் பெற்று
முன்னதும் ஓர்மையில் மறைந்து
பின்னதும் நிகழ்வில் கலந்து
பொழுதுகளாய்ப் புலர்ந்து
நிறமற்ற வேளைகளில் மயங்கி
கணமெனும் துடிப்பில் இமையாகி
தருணமாய் சாத்திரத்தில் பதிந்து
மணியின் நிழலாய் மௌனித்து
அவ்வமயம் என்றே அதிசயித்து
பருவங்களாய் உதிரும்
ஊழிப் பெருவலி கண்டு
நேரத்தின் நிரலில்
கழியும் தவமெனும் நிறை
பயணித்தது நிலையாய்
பரிணாமமாய்
நிலையற்றதில் பற்றோடு
மாறிய சேர்க்கை
ஒரு கோணம் காட்டி
குலுங்கியதில் பிரிந்து
மறு வடிவம் பெற்று
முன்னதும் ஓர்மையில் மறைந்து
பின்னதும் நிகழ்வில் கலந்து
பொழுதுகளாய்ப் புலர்ந்து
நிறமற்ற வேளைகளில் மயங்கி
கணமெனும் துடிப்பில் இமையாகி
தருணமாய் சாத்திரத்தில் பதிந்து
மணியின் நிழலாய் மௌனித்து
அவ்வமயம் என்றே அதிசயித்து
பருவங்களாய் உதிரும்
ஊழிப் பெருவலி கண்டு
நேரத்தின் நிரலில்
கழியும் தவமெனும் நிறை
Sunday, November 3, 2013
மற்றும் ஒரு...
கனவென்னும் அண்டத்து உயிரி
சுருண்டு விரல்களை விரித்தது
கமலமும் மணம் பரப்பி
குழவியின் மதுரத்தில் ஆழ்ந்திருக்க
குயிலோசை குழல் மயக்கித்தூண்ட
இரவு வடிந்து வெள்ளி சிரித்து
நிலவும் ஞாயிறும் இரு கோணம் தாங்கி
வரும் புது நிகழ்வுதனை அறியா சித்திரமாய்
நிலம் அதிர பிளந்தது பாறை
நீர் சிதறி வெடித்தது அலையாய்
தழும்பி வீழ்ந்த துளி பரவியது
படர்ந்தது ஞாலத்தின் புறத்தில்
வானின் மூலையில் வெகுவேகமாய்
வளியும் அற்ற புகைவெளியில்
பறந்த ஈரம் காயும் முன்
சேர்ந்தது விண்மீனின் முனையில்
அனலில் வேகாது தீயவும் காணாது
அணுவை உள்நுழைத்து புகட்டியது
துடிப்பென்னும் ஓர் புதிரை வாழ்வென
மெய்யும் பொய்யும் மறு உருவாய்
வன்மத்தின் ஆட்சியை பறையடித்து
மீண்டும் ஓர் பிரளயம் காண
முறிந்தது சொப்பனம் வட்டப் பாதையுள்
சலித்து வேறாக்கம் கொள்ளும் அவாவுடன்
சுருண்டு விரல்களை விரித்தது
கமலமும் மணம் பரப்பி
குழவியின் மதுரத்தில் ஆழ்ந்திருக்க
குயிலோசை குழல் மயக்கித்தூண்ட
இரவு வடிந்து வெள்ளி சிரித்து
நிலவும் ஞாயிறும் இரு கோணம் தாங்கி
வரும் புது நிகழ்வுதனை அறியா சித்திரமாய்
நிலம் அதிர பிளந்தது பாறை
நீர் சிதறி வெடித்தது அலையாய்
தழும்பி வீழ்ந்த துளி பரவியது
படர்ந்தது ஞாலத்தின் புறத்தில்
வானின் மூலையில் வெகுவேகமாய்
வளியும் அற்ற புகைவெளியில்
பறந்த ஈரம் காயும் முன்
சேர்ந்தது விண்மீனின் முனையில்
அனலில் வேகாது தீயவும் காணாது
அணுவை உள்நுழைத்து புகட்டியது
துடிப்பென்னும் ஓர் புதிரை வாழ்வென
மெய்யும் பொய்யும் மறு உருவாய்
வன்மத்தின் ஆட்சியை பறையடித்து
மீண்டும் ஓர் பிரளயம் காண
முறிந்தது சொப்பனம் வட்டப் பாதையுள்
சலித்து வேறாக்கம் கொள்ளும் அவாவுடன்
Subscribe to:
Posts (Atom)