Sunday, August 18, 2013

ஆதியும் இயைபுற்று

இலையன்ன வடிவம்
ஒரு கோணம் முடிவுற
பாத்திரமாய் துடித்து
அமுதின் அமுதாய்
கடியதில்

கமழ்ந்த முதிர்வில்
அறிந்தது அயனமாய்
யாசிக்கும் குடத்துடன்
திறந்த வழியதில்
கொப்பாய் மாறி
இயைபுற்று

பிதிர் முதிர்ந்த
பிறவும் பார்க்க
இழை கோர்த்தும்
பரிதவித்த கோசம்
நுடங்கி

இசையதிர்வும் எழும்பி
புகன்ற சாமத்து
துர்வசம் போன
நிட்டை ஒருமா என
விதந்து

தருக்கும் போஜனம்
தந்தறியா சுவனமதில்
கானமும் ஒலிக்க
முள்தைக்கும் விடமோடு
முனகி

லயத்தில் கூடும்
ஓசை இனித்து
சலனமற்று துய்யும்
மீமெய்மிக உகுத்து
பிரணவமாய்

Sunday, August 11, 2013

மலிந்த வேட்கை

கூர்ந்த பாறை
குத்திய தருணம்
இன்பம் போர்த்திய
பெருவலி சுகிக்க
மரிப்பும் இன்றி
உயிர்ப்பும் ஒன்றி
பயிரானது சுவை
சாவென்னும் சாராய்
நொதித்து உதிர
நாவில் ஊறி
ரசமாய் ஓடும்
நதியில் பாய்ந்து
மண் கிளறி
மலை சரித்து
தூபம் அணைத்து
கவின் சிதைய
நெடுவரை யெவ்வம்
பிறப்பும் ஆற்றுவித்து
இறப்பின் வேட்கை
மலியும் திறமென

Monday, August 5, 2013

கரையும்

காக்கும் சொல்லும் கரையும்
பெரு மழை பொழிவில் மண்ணாய்
நீலச்சுழல் ஆழ மாக்கடலின் உப்பில்
துளியின் கணுவில் கலந்த நேசம் போல்
விழுந்து உருண்டு ஆவியாய் நீளும்
விழி வழியில் நிர்கதியாய் தவித்து
பன்னிரு பல்லாண்டும் உறைந்து
அனல் கவ்வி அமிழும் அமிலமாய்
வினை நிகழ்த்தி வண்ணத்தில் பிரிந்து
வானின் வில்லில் சிதையும் நெடிது
ஏதுமற்று துறக்கும் நெறியும் அணைத்து
உளதாய் இலதாய் கண்டு தெளிவித்து
வளியின் நிறம் மூச்சில் இருத்தி
மீனின் போக்கும் உணர்ந்ததாய் கூறி
மரிக்கும் பொழுதைக் குறித்துக் காட்டும்
நாமத்தின் பெயரதில் அடைந்த சித்திரம்
எவ்வம் எனவே வெகுமதி உருவாய்
வருணிக்கும் உரையில் பெயர்ந்த லிபியும்
மறுஉரு கொள்ளும் உயிர் போக்கி நிலைய
பதைக்கும் என ஒல்கி சிலையன்ன
கல்லாய் வடிவெடுத்து நகைக்க

Sunday, June 23, 2013

வாள் மீக்கூறும் கனா

வாளின் கனா கண்டதைக் கூற கூர்முனையில் துருத்திய உடல் காயம் திருத்தும்

இருப்பும் இன்மையும் நிரலாய்
தீட்டிய சேதி அச்சத்தின் பிடியில்
துண்டங்களாய் மாறிய விதி என
இணைவும் சேர்ப்பும் இன்றி
முரசும் அறையும் முடிந்ததை விளம்ப
ணங்கென்றெ ஒலித்த கலப்பில்
தெறிக்கும் மதியும் சித்திரமாய்
பதைத்த குழாம் வெட்டிச் சிந்தும்
படைகலனாய் ஓடிய வீணில்
நாவின் வன்மையாய் உருமாறி
சாய்த்ததும் நுவல்ந்த மொழியில்
வீச்சின் திறம் கொள்வரின்
குத்திய ஆழம் புகன்றதொரு
புனைவும் மீக்கூறி நில்லென்
மாயும் தகையத்து உழந்து
கோடியும் குவித்த புலவில்
வடிந்த கள்ளாய் முயங்கிய
விலங்கென எயிற்றின் துணையோடு
அருங்கும் மருங்கும் துணித்து
மின்னலாய் ஒளிவீசி சோரும்
கைமலிந்த விசை பெருக்கும்
வாகை சூடும் ஒற்றை சொப்பனத்து

Sunday, June 9, 2013

சமர் நிலை

கரம் வெட்டி
கசிந்தது
சிரம் கொய்து
பீறிட்டது
கண் சிதைந்து
ஊறியது
பாவை அல்ல
கூடிமீள
பிண்டமாய் ஆடி
கூத்தும் சேர
அனலில் உருகி
சாம்பலிட்ட
அவியும் ஆவியாய்
அலையும்
மேனி சிதறிட்ட
குருதியில்
உயிரேந்தி சரிய
நகைத்து
நினைவேந்தி கழிய
சாகரத்தில்

Monday, May 27, 2013

வாள் புரியும் வலி


இடையில் துண்டான உடலாய்
பிரிந்து
சேரும் காயம் ஒட்டும் நினைவிலியில்
கண்டு
கோளமாய் விலகி எடை கூடும்
விசையும்
வாள் பாய்ந்த நீளமும் வலியின்
நிழலற்று
கொடும் புதிராய் அகத்தில் சிக்கி
நசியும்
மூச்சும் உழன்று வளி காணா
பாதையில்
மின்னலின் திறமதனை உணர்த்தும்
உயவில்
மிதக்கும் துகளாய் எண்ணக்கீற்று
படிய
ஒலியற்ற வெளியில் பயணிக்கும்
பொறியென
முடிவிலா புள்ளியில் நிறைவுறும் புலனாய்
அறிய
புகைந்த கனவும் பலன்றற யோகத்தில்
கரைந்து
அடியும் நகர நிறைகொண்ட
புதைவில்
சிதறிய திவலையாய் சோர்வுறும் இனத்தின்
குணமதை
தவறா திட்டமாய் நோயும் பரிந்து
வதிய
துணையும் கூடி மரிப்பில் விதந்து
சாய

Sunday, May 12, 2013

நோய் கொள் விருப்பு


கார்காலம்
பொழிவின் துளியில்
மீட்டெடுத்த குரலும் ஒலிக்க
   
     நாளும் நீராய்
     அனலின்றி ஆறாய்
     பெருக்கும் வெள்ளமாய்

பொலிந்ததே மடுவில்
வழிந்ததும் நினைவில்
நனைந்தது அகத்தில்

புறத்தின் புயலென
   
     சுழித்த ஊற்றாய்

பதறிய இலையும்

     பாய்ந்தது அருவியில்

எதிர்ப்படும் கல்லும்
பதிந்தது குருதியை
கலக்கும் நதியில்

ஆமென்றே ஓதி அருளும் முழு நிலவு காலத்து மறைந்த முகிலின் செவ்வண்ணம் தரிக்கும் விருப்பின் நோயை