கரம் வெட்டி
கசிந்தது
சிரம் கொய்து
பீறிட்டது
கண் சிதைந்து
ஊறியது
பாவை அல்ல
கூடிமீள
பிண்டமாய் ஆடி
கூத்தும் சேர
அனலில் உருகி
சாம்பலிட்ட
அவியும் ஆவியாய்
அலையும்
மேனி சிதறிட்ட
குருதியில்
உயிரேந்தி சரிய
நகைத்து
நினைவேந்தி கழிய
சாகரத்தில்
Sunday, June 9, 2013
Monday, May 27, 2013
வாள் புரியும் வலி
இடையில் துண்டான உடலாய்
பிரிந்து
சேரும் காயம் ஒட்டும் நினைவிலியில்
கண்டு
கோளமாய் விலகி எடை கூடும்
விசையும்
வாள் பாய்ந்த நீளமும் வலியின்
நிழலற்று
கொடும் புதிராய் அகத்தில் சிக்கி
நசியும்
மூச்சும் உழன்று வளி காணா
பாதையில்
மின்னலின் திறமதனை உணர்த்தும்
உயவில்
மிதக்கும் துகளாய் எண்ணக்கீற்று
படிய
ஒலியற்ற வெளியில் பயணிக்கும்
பொறியென
முடிவிலா புள்ளியில் நிறைவுறும் புலனாய்
அறிய
புகைந்த கனவும் பலன்றற யோகத்தில்
கரைந்து
அடியும் நகர நிறைகொண்ட
புதைவில்
சிதறிய திவலையாய் சோர்வுறும் இனத்தின்
குணமதை
தவறா திட்டமாய் நோயும் பரிந்து
வதிய
துணையும் கூடி மரிப்பில் விதந்து
சாய
Sunday, May 12, 2013
நோய் கொள் விருப்பு
கார்காலம்
பொழிவின் துளியில்
மீட்டெடுத்த குரலும் ஒலிக்க
நாளும் நீராய்
அனலின்றி ஆறாய்
பெருக்கும் வெள்ளமாய்
பொலிந்ததே மடுவில்
வழிந்ததும் நினைவில்
நனைந்தது அகத்தில்
புறத்தின் புயலென
சுழித்த ஊற்றாய்
பதறிய இலையும்
பாய்ந்தது அருவியில்
எதிர்ப்படும் கல்லும்
பதிந்தது குருதியை
கலக்கும் நதியில்
ஆமென்றே ஓதி அருளும் முழு நிலவு காலத்து மறைந்த முகிலின் செவ்வண்ணம் தரிக்கும் விருப்பின் நோயை
Tuesday, April 16, 2013
உயிராக்கம்
குலுங்கும் சிறு கிளையில்
துடித்துப் பார்த்தது சிறுகுருகும்
தலைகீழ் காட்சியாய்நீர்மேல் மலையும்
அருவிமேல் விருட்சமும்
விருட்சத்தில் முளைக்கும் விசும்பும்
தீப்பறவை போல் மிதந்து வந்த
பொறி கொள் மீன்
பற்றியது வனத்தை
வதனமும் கதற
மறைந்தன சிற்றொலிகள்
துரத்தும் அனலைத் தாண்டி பறந்தது காக்கும் வெளி தேடி-
ஆட்டம் நிகழ்ந்தது
குருவியின் நிழலொன்று
கூத்தும் கூவ
பாவைகள் பலவும்
தொடரும் விதியில்
கூவலும் ஓரினமாய்
அறிதலும் ஒருமையாய்
பதுமைகள் இணைந்து பல்லுயிர்
பெருக்கி ஒற்றை வடிவில்
இறையின் இறையுமாகி
சேவித்தார் அருளதனை
புதைக்கும் சிறுகல்குருவி இடத்து
Monday, April 8, 2013
பாயும் ஒளி
பிறக்கும் பிறிதொரு உயிராய்
(விழிமலர்ந்து)
இருப்பும் யாவின் உட்பொருளாய்
(விரிவும் பாவை ஒளி கூடா)
வியக்கும் திறம் எவரறிவதாய்
(துணையும் சேராது)
தானமர்க்கும் தமதல்லேம் நவில்வதாய்
(பற்றாமலும் மேவி)
சுடர் வாங்கி பொலியும்
(இறுகும் எவ்வம்)
அலமரும் உடம்போடு பிரிந்திருக்க
(தவிப்பும் ஏக)
அயரும் கண்ணும் குவிந்ததாய்
(உயவும் வலித்து)
மாயத் தீயின் வெந்தணலில்
(கொடும் மூச்சும்)
மணலும் சுகிக்கும் பகலாய்
(வட்டமிடும் பருந்தும்)
ஆலத்தின் விழுததனை விடுத்து
இன்மையும் உள்வாங்கும் செவியில்
(பாயும் ஞாயிறுடன்)
Sunday, March 17, 2013
ஓவியமாய்
காட்சி புனைந்து
மலை சூழும் நிறமும்
கலந்து மழை முகிலும்
கவிந்திருக்க
தூரிகையில் மானாய்
படிந்திருந்த வண்ணம்
உருவும் நிறைபெற்று
முகிழ்த்தது குருஎனும்
துலக்கமுளதான்
வரியதனை மெய்யென்றே
உகளும் புரிபடா
உலகில்
தாதைக் குறித்த
காதையதுவே
சிறுநெஞ்சில் விரிந்த
புலமாய் இணையிலா
பேருவகை மூளுமோ
என்றென்றும் அருகில்
நிலைத்திருக்கும்
அழியா சக்தி
மீட்டெடுத்த கனவாய்
நனவின் படியில்
நாதகானம் துறவின்
துவர்ப்பில் குழவியின்
கண்ணுற்ற தெய்வதமே
Sunday, February 24, 2013
விழியின் விழி
பனிசூழும் காற்று குத்தும் குளிராய்
மெல்லிதழ் வருடி வாட
விழி கொள் பார்வை
புலன் கடிந்து நுடங்க
இசை முகிழும் அகம்
தனிப்பெரும் தகிப்பின் வாசமாய்
புலவும் நிலை கூறி
புறம் நிற்கும் கழிப்பாய்
தறிகெட்ட விசையென அறிவின் இயல்பாய்
இருள் உலகும் நகைத்து
ஒளி புகா படலத்தில்
ஊர்ந்து பாய
செவியும் ஈருணர்
வகை போல் தகவுகொண்டு
தொட்டும் நுகர்ந்தும்
வடிவமாய் வரைய
வண்ணங்களற்று உவர்ப்பின் சுவையாய்
கதிர் வீசும் கனத்துடன்
யாவரும் நிறையும்
கலன் அன்ன சிரத்தை
தாங்கி தானாய் ஏந்தி
நீர் நிறை ஞாலத்தில்
படரவும் விட்டு புகலும் கூற்றாய்
சேருமோ கண் எனும் பிணி
Subscribe to:
Posts (Atom)