Sunday, August 30, 2015

இசை பகர்ந்து

துருவத்து மீனும்
கோளின் நிகர்
ஆழத்துளையின்
செம்மை நீளும்
புனல் சேர்ந்த
ஓடை பாய்வதில்
நாவியும் ஓடி
மென்ஒலி இசையும்
பெருக்கெடுத்துப் பகர
வினையாவும்
சமைந்து கூம்ப
பெருங்கனிக் கூட்டம்
தேன் சொரியும்
மலர்ப் பொய்கை
ஈர்க்கும் சுவனத்து
இம்மையின் பெற்றியில்
வேற்றசைவும்
முறுக்கேறி பதிய
சாக்காடு நோகா
துயரத்தில் சார்ந்து
முற்றிடும் கோவை