Sunday, August 18, 2013

ஆதியும் இயைபுற்று

இலையன்ன வடிவம்
ஒரு கோணம் முடிவுற
பாத்திரமாய் துடித்து
அமுதின் அமுதாய்
கடியதில்

கமழ்ந்த முதிர்வில்
அறிந்தது அயனமாய்
யாசிக்கும் குடத்துடன்
திறந்த வழியதில்
கொப்பாய் மாறி
இயைபுற்று

பிதிர் முதிர்ந்த
பிறவும் பார்க்க
இழை கோர்த்தும்
பரிதவித்த கோசம்
நுடங்கி

இசையதிர்வும் எழும்பி
புகன்ற சாமத்து
துர்வசம் போன
நிட்டை ஒருமா என
விதந்து

தருக்கும் போஜனம்
தந்தறியா சுவனமதில்
கானமும் ஒலிக்க
முள்தைக்கும் விடமோடு
முனகி

லயத்தில் கூடும்
ஓசை இனித்து
சலனமற்று துய்யும்
மீமெய்மிக உகுத்து
பிரணவமாய்

Sunday, August 11, 2013

மலிந்த வேட்கை

கூர்ந்த பாறை
குத்திய தருணம்
இன்பம் போர்த்திய
பெருவலி சுகிக்க
மரிப்பும் இன்றி
உயிர்ப்பும் ஒன்றி
பயிரானது சுவை
சாவென்னும் சாராய்
நொதித்து உதிர
நாவில் ஊறி
ரசமாய் ஓடும்
நதியில் பாய்ந்து
மண் கிளறி
மலை சரித்து
தூபம் அணைத்து
கவின் சிதைய
நெடுவரை யெவ்வம்
பிறப்பும் ஆற்றுவித்து
இறப்பின் வேட்கை
மலியும் திறமென

Monday, August 5, 2013

கரையும்

காக்கும் சொல்லும் கரையும்
பெரு மழை பொழிவில் மண்ணாய்
நீலச்சுழல் ஆழ மாக்கடலின் உப்பில்
துளியின் கணுவில் கலந்த நேசம் போல்
விழுந்து உருண்டு ஆவியாய் நீளும்
விழி வழியில் நிர்கதியாய் தவித்து
பன்னிரு பல்லாண்டும் உறைந்து
அனல் கவ்வி அமிழும் அமிலமாய்
வினை நிகழ்த்தி வண்ணத்தில் பிரிந்து
வானின் வில்லில் சிதையும் நெடிது
ஏதுமற்று துறக்கும் நெறியும் அணைத்து
உளதாய் இலதாய் கண்டு தெளிவித்து
வளியின் நிறம் மூச்சில் இருத்தி
மீனின் போக்கும் உணர்ந்ததாய் கூறி
மரிக்கும் பொழுதைக் குறித்துக் காட்டும்
நாமத்தின் பெயரதில் அடைந்த சித்திரம்
எவ்வம் எனவே வெகுமதி உருவாய்
வருணிக்கும் உரையில் பெயர்ந்த லிபியும்
மறுஉரு கொள்ளும் உயிர் போக்கி நிலைய
பதைக்கும் என ஒல்கி சிலையன்ன
கல்லாய் வடிவெடுத்து நகைக்க