Monday, September 14, 2015

பெயரிலா நினைவில்

வட்டச் சுழல் ஆடி
வனைந்த குமிழில்
இறகும் புக
ஊசி முனை
வளியும் நுழைய
படபடக்கா சிறகின்
அசைவும் சிரத்தில்
கொண்டு அசைய
வண்ணம் ஒட்டிய
சுவரில் ஒளிவீழ
காப்பும் எடையாய்
மலரா வாசம்
ஈர்க்கும் புலனாய்
வீச்சின் துவர்ப்பில்
இறுகும் விடியும்
கோர்த்த உடனுறை
மௌனம் விரிய
அரிவரி ஆகும் என
அனலிலும் வாடா
குளிரிலும் நடுக்கா
அவ்வமயச் சாத்திரத்தில்
ஓர் சருக்கம் என்றே
புரளும் தற்கூற்று
வேட்டலில் மேன்மையும்
இகத்தின் நற்சான்றாய்
பெயரும் நிறம் கூட்டி