Sunday, June 5, 2011

குமையும் மந்திரத்தில்

குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்

வண்ணம் வளையும்
வேர்முகிழ் இலையில்
மந்திரத் துகிலும்
மாந்தரின் அயிராய்
துளைத்த செங்குருதி
லச்சினையின் இருமை
புகலும் துதியில்

குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்

சதி மண்டும்
சித்திர விண்ணில்
மீள்புகா ஒருகண்
குமையும் கரத்து
சீவனே மண்ணுரைக்கும்
பீலி நெருடும்
பெறா புரவியின்

குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்

7 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான சிந்தனை...

sathishsangkavi.blogspot.com said...

//சதி மண்டும்
சித்திர விண்ணில்
மீள்புகா ஒருகண்
குமையும் கரத்து
சீவனே மண்ணுரைக்கும்
பீலி நெருடும்
பெறா புரவியின்

குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில் //

நல்ல சிந்தனை, நல்ல கவிதை..

Unknown said...

??????????????

கவி அழகன் said...

வித்தியாசமான கவிதை

சொல்கேளான் ஏ.வி.கிரி said...

புரியும்படி எழுதுங்கள்...

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Mubeen Sadhika said...

#கவிதை வீதி #சௌந்தர், சங்கவி, யாதவன், ரத்னவேல் கவிதைப் படித்து கருத்தைச் சொன்னதற்கு நன்றி.