Sunday, January 22, 2012

வலை இழை


கவ்வி...
கதுவி...
சிக்கி..சிதறி..இடறி...
ஒற்றி..ஒருங்குகூடி...

வலையும் அலையும்
படையும் தடையும்
இணையும் இழையும்

நூலாய்...
திரியாய்...
பின்னி..சுற்றி...முறுக்கி...
கட்டி...கைப்பற்றி...

சிரமும் கொட்டும்
காலும் எட்டும்
இடையும் கட்டும்

ஆலம்...
நீலம்...
கருத்து...சிறுத்து...ஒறுத்து...
பகுத்து...துயருறுத்து...

மனை சுழலும்
இரை தேரும்
நிலை புரக்கும்

விட்டு..
பிடித்து...
பழித்து..
வினைமுடித்து...உமிழ்ந்து
கயிறும் திரித்து...நூல் மையத்து
விழித்து...

1 comment:

http://www.health-world-health.blogspot.com/ said...

VANJOOR தாத்தா இங்கையும் வந்துட்டாரு