Sunday, August 26, 2012

அகம் கொள் பொருள்


வண்ணத்தி நீள் பறந்து துடித்து
அமரும் ஆங்கே. சேதியும்
மறைத்து. எவ்வகை திறக்கும்
மறைபொருள் அறிய. திறம்
கொள் புலனும் கையறு காட்டி.
தவம் தரு ஞானம் ஒரு வழிசுட்டி.

பாறை இடுக்கில்
புலர்ந்த மொட்டை
பறித்து தேனும்
சொறிந்த அகமாய்
செறிந்த குருவிடத்து
சேவித்த தருணம்

வண்ணத்தி நிறம் புரிந்தது:மண்ணென்று
வடிவம் தரித்தது:ரௌத்ரமாய்
நிலைத்தது:நீரின் இடத்து

இணைக்கும் பொருளின் சேர்க்கை:
மண் பெரும் ரௌத்ரம் நீராய் மாறுமோ....

மாறியது நிலமும் ஆடி
கொண்டது பேரலையாய்....

No comments: