Sunday, September 9, 2012

எம்மையும் உம்மையும்


உன்
ஒரு முகத்தின்
பாரா கணத்தில்
நிலைகொள்
இடும்பையோடு
பிரியும்
வளைவாய்
நெடுக
நீரின் நிறம்


என்
உரு அகத்தின்
புரியும் தருணத்தில்
அலையும்
களித்துயிலில்
சேரும்
பரப்பாய்
குறுக
குருதி வண்ணம்

நின்
சிறுபுறத்தின்
சிதறா காலத்தில்
கலையும்
உழந்து
கலப்புடன்
மையத்தில்
பொழியும் நிறமற்று

எம்
பெரு வெளியின்
குவிந்த பொழுதில்
இரங்கலில்
குழைவாய்
கிடையில்
விளிம்பில்
நாறி சாயமற்று

4 comments:

ம.தி.சுதா said...

அருமையான வரிகள் சகோதரி...

துரைடேனியல் said...

புரியலைங்க...இதுதான் புதுக்கவிதை என்றால் பழைய செய்யுளே பரவாயில்லையே!

நந்தாகுமாரன் said...

I have always liked most of your fusion poetry ... This one too

Mubeen Sadhika said...

தி.சுதா, Nundhaa நன்றி.
துரைடேனியல் வாசித்ததற்கு நன்றி.