Sunday, October 28, 2012

விருப்பும் விட்டிலாய் பறக்க


வெள்ளி நீரோடும்
தூயநதியில் வீழ்ந்த
வெண்முல்லை சரமன்ன
அவள் அலையும்
கரையினில்

எயிற்றில் தன்னல பாரம்
கடித்து இழுத்து நகரும்
வேட்கை மன்னர்கள்
கடமையும் புறந்தள்ள
விருப்பும் அகங்கொள்ள
விட்டிலாய் பறக்க

பேதை கொள்ளும் கருணையே
இடரில் புதையும் அனலாய்
பாராமுகம் காட்ட
ஓலம் பெருக்கி ஈர்க்கும்
தன் மக்கள் தன் உடமை
ஓங்கும் பேரவா
பெண்ணும் காயமாய்
சிறுத்தாங்கு புகல

குறுநகையும் வெறுப்புற்று
வதியும் கொடுஞ்சினமும்
வருந்தாத ஆவின் தோலன்ன
புகழ்உடல் பெற்ற மறவர்

பூவும் சொறியும்
அமுதும் பெறா
பேராய் பெற்றிடினில்
இழுக்கும் விசையும்
இயைபற்று சுயம்மறைந்து
தேறாகனவினில் புலரும்
கணம்தனை மறந்து

No comments: