பனிசூழும் காற்று குத்தும் குளிராய்
மெல்லிதழ் வருடி வாட
விழி கொள் பார்வை
புலன் கடிந்து நுடங்க
இசை முகிழும் அகம்
தனிப்பெரும் தகிப்பின் வாசமாய்
புலவும் நிலை கூறி
புறம் நிற்கும் கழிப்பாய்
தறிகெட்ட விசையென அறிவின் இயல்பாய்
இருள் உலகும் நகைத்து
ஒளி புகா படலத்தில்
ஊர்ந்து பாய
செவியும் ஈருணர்
வகை போல் தகவுகொண்டு
தொட்டும் நுகர்ந்தும்
வடிவமாய் வரைய
வண்ணங்களற்று உவர்ப்பின் சுவையாய்
கதிர் வீசும் கனத்துடன்
யாவரும் நிறையும்
கலன் அன்ன சிரத்தை
தாங்கி தானாய் ஏந்தி
நீர் நிறை ஞாலத்தில்
படரவும் விட்டு புகலும் கூற்றாய்
சேருமோ கண் எனும் பிணி
2 comments:
மரபு மொழி நடையை நவீனதிற்குள் கொணர்ந்து நவீனதை உடைக்கும் பின்மரபுத்துவம் ... எனக்குப் பிடித்திருக்கிறது ...
நன்றி NKR R.
Post a Comment