Monday, April 8, 2013

பாயும் ஒளி


பிறக்கும் பிறிதொரு உயிராய்
(விழிமலர்ந்து)
இருப்பும் யாவின் உட்பொருளாய்
(விரிவும் பாவை ஒளி கூடா)
வியக்கும் திறம் எவரறிவதாய்
(துணையும் சேராது)
தானமர்க்கும் தமதல்லேம் நவில்வதாய்
(பற்றாமலும் மேவி)
சுடர் வாங்கி பொலியும்
(இறுகும் எவ்வம்)
அலமரும் உடம்போடு பிரிந்திருக்க
(தவிப்பும் ஏக)
அயரும் கண்ணும் குவிந்ததாய்
(உயவும் வலித்து)
மாயத் தீயின் வெந்தணலில்
(கொடும் மூச்சும்)
மணலும் சுகிக்கும் பகலாய்
(வட்டமிடும் பருந்தும்)
ஆலத்தின் விழுததனை விடுத்து
இன்மையும் உள்வாங்கும் செவியில்
(பாயும் ஞாயிறுடன்)

No comments: