Sunday, May 12, 2013

நோய் கொள் விருப்பு


கார்காலம்
பொழிவின் துளியில்
மீட்டெடுத்த குரலும் ஒலிக்க
   
     நாளும் நீராய்
     அனலின்றி ஆறாய்
     பெருக்கும் வெள்ளமாய்

பொலிந்ததே மடுவில்
வழிந்ததும் நினைவில்
நனைந்தது அகத்தில்

புறத்தின் புயலென
   
     சுழித்த ஊற்றாய்

பதறிய இலையும்

     பாய்ந்தது அருவியில்

எதிர்ப்படும் கல்லும்
பதிந்தது குருதியை
கலக்கும் நதியில்

ஆமென்றே ஓதி அருளும் முழு நிலவு காலத்து மறைந்த முகிலின் செவ்வண்ணம் தரிக்கும் விருப்பின் நோயை

No comments: