Sunday, January 26, 2014

வயங்கும் பருவங்கள்

பவளப் பருவம்

வேனில் முற்றும் காயாய் பூத்தது
கனியாய் முதிரும் சுகமாய் விளைந்தது
செங்குருதி முத்தாய் சமைந்ததில்
கானும் சடங்காய் அமைந்தது

அந்தருவப் பருவம்

பூஜ்யத்து நித்திரை கோசம் பெருக
தபசும் அனுபோத மருவத்தில் கோர்த்து
புகவிளங்க பூஜை ஆயும் மந்திரத்தில்
உன்னத பொற்பலமும் இலங்குவதில்

உணர் பருவம்

பாக்கியமும் மலர்ந்த ரோகணத்தில்
பையுள் முகிழும் திரண்ட யுகத்தில்
சர்ப்பம் விரையும் கமலச் செண்டில்
சரசமாடா பஞ்ச லோகத்து

புனர் பருவம்

மஜ்ஜை கலையும் கோண் முகில்
உற்பவித்த தாழ்பதி மண்டிலம்
மாச்சரியம் சூழ் மேவுலகு பண்பட்டு
விகற்பமும் தாண்டி லயத்தின் சொப்பனமாய்

புதை பருவம்

கூர்மம் புனைந்த பெருவெளி கோளம்
மன்னும் மீனும் இந்திர விஜயத்தில்
தயை துவர்ந்து தரங்கம் அதிர
வேணுவும் கானமாய் முரலும் வாக்கில்


மந்திரச்சிமிழ், ஆகஸ்ட் 2013- ஜூலை 2014 இதழில் வெளியான கவிதை.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் பல...

Mubeen Sadhika said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Anonymous said...

வணக்கம்

சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மலரின் நினைவுகள் said...

அருமை...
எப்"பா" வகை?

Mubeen Sadhika said...

நன்றி 2008rupan.

Mubeen Sadhika said...

நன்றி மலரின் நினைவுகள்