Sunday, February 9, 2014

ஓர் பொறி நகும்

பொறி இயங்கும்
ஆரம் பலதாய்
வட்டுச் சுருக்கம்
ஓடும் நிழற்பாதை
குவிவது போன்மை
விலகும் பான்மை
எண் கணிக்கும்
பார்த்தலற்ற விழி
பழகியது வடிவம்
இருள் சேர்க்க
ஒளி பிளக்க
தீதாய் மாறிய
திரை மயக்கம்
உணர் சித்திர
மறைவதில் கலந்து
நகும் வேள்வி
வரம் என்று
காட்டி அல்லதை
ஓம்பி செயல்
பகுக்கக் காணும்
ஓர் இடர் புகுந்து
பெருவலி சுகித்து
அற்றது வரின்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சொல்ல வார்த்தைகள் இல்லை...

அருமை...

Mubeen Sadhika said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்