Sunday, February 23, 2014

நிகரின்மை

சிரம் பிளக்க வலி உடைத்து
உறவும் சிதறி துண்டாக
அன் எனவும் அள் எனவும்
பிரிந்து நிகராகா முயக்கத்தில்
இருமையும் சேரும் புள்ளி
இணையற்று கூடிக் குறைய
ஓர் குறி மாறி மறுபிறப்பும்
அணிந்து உலவா சதுக்கத்தில்
கானமும் மறைந்து குருதி தெறிக்கும்
சூத்திரம் பாய அணையா
வெள்ளமன்ன பெருகி துயர் என
விரிந்து உயவுக் கடலில்
நடமிட முகைந்து பறக்கும்
கழுகாய் சிறகொடிந்து மீனின்
இரை புகும் கொள்வாய்
சேதம் காணும் அகம் புகலும்
கனத்து ஒறுக்கும் புலன் பரிவை

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

ரசித்தேன் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Mubeen Sadhika said...

நன்றி ரூபன்