Sunday, September 7, 2014

ஞாயிறும் பிறக்க

அருகா மருங்கில்
அவ்விரி அக்கதிர்
அச்சிறு அம்பலம்
அகலும்

இருள் ஒழியும்
இத்திற நிறத்தின்
இவ்வையகத்தில்
இருந்தவம்

உச்சியில் நிலவும்
உயிர் உருக்கும்
உவப்பில் சிவக்கும்
உரத்தில்

எழும் பகல்
எழும்நிறை
எருவாய்
எரியும்

ஐம்புனல் ஓதும்
ஐயங்காண்
ஐம்புவனத்து
ஐவனத்தில்

ஒளியின் ஓர் கீற்று
ஒற்றை வானில்
ஒருமை காண்
ஒருங்கண்

No comments: