Monday, July 2, 2012

அமிழ்தாய்ச் சமைத்து


இதழ் காணும் இதழில்
சேரும் முள்ளின் சதையாய்
உடல் சாறில் கலக்க
புளிக்கும் நீரால் பிணைந்து
உவர்ப்பின் சதிரில் வாடி
தண்ணென்று தவழ்ந்து
சொரியும் பாலை
ஈர்த்துக் கொழுக்கும் அலகில்
தாழிட்டு மிழற்றி கூட
பாயும் கணம் மறைந்து
துவளும் மாயத்து
பொறிபோல் தொடர்ந்த
மதம் குணமாய் உவகையிட்டு
இதம் ருசியாய் அந்தியில்
உச்சத்தின் தேனாய் ஊற
அமிழ்தின் தினையதில் வகைப்பட

No comments: