Monday, July 9, 2012

அல்லி அவிழும் அதரம்




பால் அன்ன முகமும்
பூ போல் விழியும்
இதழ் மடித்து சிலிர்க்கும்
மண் சமைந்து உடலானதோ
உயிராய் பயிர்த்து
கண் விரிந்தால் உதிரும் மலர்
இதழ் நனைந்தால் வீழும் மொட்டு
மழையும் பொழிந்து
விதிர்த்தது புஷ்பம்
மணலும் நீராய்
துளியில் பார்க்க
புனலில் மிதக்க
கடலில் கலக்க
ஆவியும் காற்றோடு
பனியில் ஜனித்து
கல்லாய் இமைக்கும்
அதரமும் மறுதளித்து மடலாய்
புதையும் உருமாறி


2 comments:

Unknown said...

அருமை...

Mubeen Sadhika said...

நன்றி ayesha Farook