Sunday, September 2, 2012

தொடரல்


நீல வண்ணத்தி
தேன் கவர்ந்து
மலைமுகட்டில் உயரே
பறந்து படபடத்து
மகிழும் சேதி
கோர்க்க தருவின்
நிழல் கூடியமரத்து
பொன் வண்ண அரவும்
ஊறி மொட்டின்
வாசம் முகர
விடத்தின் காற்று
விரட்டியது சிற்றுயிரை
பூத்தேடி தளிர்நாடி
மெல்லிதழ் நடுங்க
நீலக்கமலம் புக
மலர் நுகர்ந்து
பேரின்பம் பெற்றிடவே
குளம் கண்டு
பாம்பும் தொடர
நீருள் மூழ்கி
தாமரை வேர்
பின்னி தளரும்
மூச்சை நிறுத்தி

2 comments:

Unknown said...

நீங்கள் எழுதும் வரிகளில் தமிழ் மகள் நடனமாடுகிறாள் சகோதரி... அருமை.

உங்களை என் வலைக்கு அன்புடன் அழைக்கிறேன், வருக!
இட்லி சுவைத்திட உங்களை வலைக்கு இனிதே அழைக்கிறேன், வருகவும், ருசிக்கவும், பதிவிடவும்... நன்றி

Mubeen Sadhika said...

நன்றி Ayesha Farook