தொடரல்
நீல வண்ணத்தி
தேன் கவர்ந்து
மலைமுகட்டில் உயரே
பறந்து படபடத்து
மகிழும் சேதி
கோர்க்க தருவின்
நிழல் கூடியமரத்து
பொன் வண்ண அரவும்
ஊறி மொட்டின்
வாசம் முகர
விடத்தின் காற்று
விரட்டியது சிற்றுயிரை
பூத்தேடி தளிர்நாடி
மெல்லிதழ் நடுங்க
நீலக்கமலம் புக
மலர் நுகர்ந்து
பேரின்பம் பெற்றிடவே
குளம் கண்டு
பாம்பும் தொடர
நீருள் மூழ்கி
தாமரை வேர்
பின்னி தளரும்
மூச்சை நிறுத்தி
2 comments:
நீங்கள் எழுதும் வரிகளில் தமிழ் மகள் நடனமாடுகிறாள் சகோதரி... அருமை.
உங்களை என் வலைக்கு அன்புடன் அழைக்கிறேன், வருக!
இட்லி சுவைத்திட உங்களை வலைக்கு இனிதே அழைக்கிறேன், வருகவும், ருசிக்கவும், பதிவிடவும்... நன்றி
நன்றி Ayesha Farook
Post a Comment