ஏட்டை விலக்கி
குருதி நிற விழிகள்
சிறுவட்ட சிரத்தில்
ஆடும் செவ்வண்ண கொண்டை
சுழிக்கும் அலகு
நீலச்சிதறலாய்
சிறு கழுத்து வளைய
இறகும் மெல்லிய
மழைக் கனவின்
வானவில்லாய் அசைய
மஞ்சள் கால் நகர
மூவ்வுலகப் பறவை
விரிந்தது விண்ணில்
குவளைக் கண்ணும் சிவக்க
சென்னியும் கோளமாய்
சிவந்த மலர்களாட
குவிந்தது இதழும்
குளிரும் தோளும்
மெல் நடுங்கி இணைய
தோகை சிறகும்
முகில் பூத்த
மலைமுகடாய் செறிய
பொன் பாதம் நடமிட
வேற்றுலக தேவதை
நிறைந்தது நிலத்தில்
ஈருயிரும் ஓருயிராய்
புனைவெழுதி குருவும்
நகை கொள்ள
ஏட்டை விலக்கி
பறந்தனவே
பறவையும் எழிலாளும்
3 comments:
என்ன இது மெட்டா பிக்சனா?
அருமையாக உள்ளது கவிதை.
அந்த பறவையின் ஒய்யார நடை சுழிப்ப எல்லாம் காட்சியாகிறது.
ஒரு ஓவியம் உயிராகி பறந்துவிடுகிறது கவிதையிலிரந்து வெளிநோக்கி. மூவுலகப்பறவை என்பது நல்ல சொல்லாட்சி. புரியும்படி எழுதி உள்ளீர்கள்.
மிக்க நன்றி ஜமாலன். நீங்கள் இதை படித்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது.
அருமை சகோ!.....
Post a Comment