செவியில் ஓர் வரி
வளைந்து
நுதலில் மறுவரி
சேர்ந்து
ஒலிகேட்டு உயர்த்த
ஓர் வரி இட்டு
கழுத்தில் மூவரி
இணைந்து
புஜமும் பலவரி
கொண்டு
கால்களில் குறுவரி
கோர்த்து
வாலும் நீள்வரி
சுழற்றி
கண்ணும் துளைக்க
கூர்வேலுமாய்
வெகுளி காண் பெருக்கத்தில்
பாய்ந்து
இரைதேடி
கானகத்து நீர்வரியில்
2 comments:
முதல் முறையாக உங்கள் பதிவை பார்க்கிறேன். மிக மிக வித்தியாசமாக இருக்கிறது.. வாழ்த்துகள்
pichaikaaran அவர்களுக்கு, நன்றி.
Post a Comment