Sunday, December 2, 2012

கொடுவரி


செவியில் ஓர் வரி
வளைந்து
நுதலில் மறுவரி
சேர்ந்து
ஒலிகேட்டு உயர்த்த
ஓர் வரி இட்டு
கழுத்தில் மூவரி
இணைந்து
புஜமும் பலவரி
கொண்டு
கால்களில் குறுவரி
கோர்த்து
வாலும் நீள்வரி
சுழற்றி
கண்ணும் துளைக்க
கூர்வேலுமாய்
வெகுளி காண் பெருக்கத்தில்
பாய்ந்து
இரைதேடி
கானகத்து நீர்வரியில்

2 comments:

pichaikaaran said...

முதல் முறையாக உங்கள் பதிவை பார்க்கிறேன். மிக மிக வித்தியாசமாக இருக்கிறது.. வாழ்த்துகள்

Mubeen Sadhika said...

pichaikaaran அவர்களுக்கு, நன்றி.