Sunday, December 9, 2012

பல்லுயிர்க் கனா


முற்றத்தில் முளைத்தன
பலவர்ணப் புழுவும்
வெடித்தது ஒன்று
காளை முகம் கொண்டு
நகைத்தது நரியின்
திறத்தில் தன்னிலை
தான் அழித்து
நிமிர்ந்தது மந்தியாய்
சதியும் புனைந்து
சிங்கத்தின் பிடரிபெற்று
ஓலமிட்டது கடுவன்
குரலில் கூவென்று
வாலில் நஞ்சும்
பொழிந்து அனலாய்
இச்சை கொள்ளா
மகளின் சேவகத்தில்
நன்றல்லது நன்றாய்
நயமுடன் பயக்கும்
ஆவென் உள்ளம்

No comments: