Sunday, October 13, 2013

ஒலியன் பொருளனாய்

உள் ஒலிக்கும் ஒலியனின் அலகை உணர் பொருளாய் அளவிடாது கணிக்கும் செயலி என காணக்கிடைத்தது

ஓசை என்றே
ஓர் குறிப்பு
இணைந்தும் பிரிந்தும்
முதல் ஒலிப்பாய்
இடை நிலையாய்
சடை வடிவமாய்
உள்ளும் புறமும்
அடங்கி விரிந்து
ஊடுருவும் பரவலாய்
வளியோடு சேர்ந்து
நீரிலும் மிதந்து
விளிம்பின் எல்லை
ஓரத்தின் முடிவாய்
துண்டாகித் துகளாகி
மறுகோர்வையில்
மீளாது அலையென
மேல் முகடும்
கீழ் தாழலும்
வரிசையில் பயின்று
நாவும் அசைய
மூச்சும் அதிர
பேச்சென்னும்
அரவம் தவிர்த்து
உக்கிர வகைமையில்
பல்கியும் சார்ந்தும்
மறு ஆக்கம் உடைத்து
தீர்மானம் உணர்த்தி
பொருளன் இதுவென
புனைவும் அற்றும்
கவ்வி எல்லையாய்
படிந்தது திடமாய்

அடரும் இசையோ அது போலன்ன கடக்கும் கைப்படா
செவி நுகர் வாய் பகர் வித்தை

4 comments:

Anonymous said...

வணக்கம்

கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Mubeen Sadhika said...

நன்றி ரூபன்

திண்டுக்கல் தனபாலன் said...

/// மேல் முகடும்
கீழ் தாழலும்
வரிசையில் பயின்று
நாவும் அசைய
மூச்சும் அதிர
பேச்சென்னும்
அரவம் தவிர்த்து ///

அருமை... வாழ்த்துக்கள்...

Mubeen Sadhika said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்