Sunday, September 29, 2013

கனவும் மெய்ப்பொருள் தேடி

கனவென்னும் அச்சம் மருட்டித் தவித்தது நினைவென்னும் காலை

கொடியும் இறுக்கும் கிளையாய்
கையும் காலும் ஓடி சுருண்டு
சிரத்தை மாற்றி பூவும் மலர்ந்து
காயெனப் பறிப்பதில் கலையுமோ

குகை நுழைந்த வாசல் மூடி
பாறை மேல் வீழும் கணத்தில்
அரவென்று கண் கொத்தி
விடமிறங்கி பாம்பாய் அசைந்து

கூத்தின் நிகழ்வில் பாத்திரமேற்று
கயிற்றில் தொங்கும் பறவையாய்
தன் காதை செப்பும் வேளை
சிறகும் முளைத்து பறந்து செல்ல

குளம் மலரும் கமலத்தை நாடி
நீரில் அமிழ சிறைபிடித்த தாவரம்
சதையும் குருதியும் உறிய சிறுத்து
சில்வண்டாய் மலரில் மயங்க

வனம் புகுந்து வசிக்கும் நோக்குடன்
புதர் மறைய பாசியில் வழுக்கி
அருவியில் பாய்ந்து நதியில் மிதக்க
குமிழ்ந்த நுரையாய் மடைமாற்றிப் போக

சொப்பனம் பொருள் கொள்ளும் நிகண்டில் கண்ட சேதி தன்னிலை மிகையாக்கி புறத்தில் நடத்தும் காட்சியென

No comments: