Monday, October 21, 2013

புலன் மாறும்

சிறு பொறி
வினை பெரிது
பார்க்கும் கேட்கும் பகரும் நுகரும் ஊறும் உருகும்
உணர்வுப் புலன் மயம் இறுகிய சூத்திரம்
தொல்பொருள்
தொகுப்பின் சேமிப்பாய்

பார்த்தலில் கேட்டலும்
நுகர்தலில் ஊறுதலும்
பகர்தலில் உறைதலும்

எனவே சிறுத்து
துறை மாற்றுச் செய்யும் சிந்தையாய்
குறுகும் பரிணாமம் ஆற்றுவிக்க
மேலும் வளர்ந்த
புத்தறிவு சொடுக்கலில்

பல்லுயிர் காண்பதும் கூறுவதும் ஆன
எண்ணில் கொள்ளும் உணர்நிலை ஒற்றையாய்
ஒரு விசை
என பதிய

எந்திரச் சேவை அனைத்தும் இயக்கும்
விரல்நுனி ஓர் சொரூபத்தில் பொருந்தி
இனி எதுவும்
பிரித்தறியா கண்ணியில்

கோர்த்து படைக்கும் கரும்புகை மண்டலமும்
கொத்தாய் கூடும் விண்மீன் அண்டமும்
விரிந்த புலத்தில்
தனதென ஆக்கும்

கரணமில் சக்தியின் பலமும்
அடக்கிய வரிசூல் மெய்யின் பொருள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்...

நீங்களும் ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளலாமே...

விவரங்களுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

நன்றி...

Mubeen Sadhika said...

உங்களின் ஆதரவுக்கும் நல்லெண்ணத்துக்கும் எனது நன்றிகள் திரு. திண்டுக்கல் தனபாலன். நான் இது போன்ற போட்டிகளில் பங்கெடுப்பதில்லை. தொடர்ந்து கவிதைகளைப் படித்து ஊக்கம் கொடுத்து வருவதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி.