Sunday, December 22, 2013

கனவுச் சாத்திரம்

இரவுப் பறவை
உமிழ்ந்த நெருப்பில்
கனவும் கலைய
இறுதிக் காட்சி
சொடுக்கிய நினைவில்
எருதின் கழுத்தை
பிணைத்த அரவும்
ஓலமிட்டு நகைக்க
புத்தொளி வீசிய
மணிக்கல் செம்மையில்
வெம்மை மறைய
குரலொன்று எழும்பி
கொடிபுரளும் மண்ணில்
நீரும் வற்றி
நிலைத்தாங்கு இன்றி
பிளக்கும் புவியில்
உயிர்காணா சாத்திரம்
தினம் பயிலும்
திறமதனை ஓதும்

No comments: