Sunday, December 8, 2013

பரிதவிக்கும் இனம்

உளமோடு பதிந்தது பெயரும்
உவப்பாய் கொள்ளும் ஒலியிலும்
உணர்வெனும் பொருளின்மையாய்
கண்ணால் உட்புகும் மௌனத்தில்
சுற்றித் திரியும் மேயும் தாவும்
உணவும் பிணியும் அறிந்தது
இனமாய்ச் சேர்ந்தாலும் ஒன்றறியாது
மாவென்றழைக்கும் மொழிமாற்றி
உருவகித்து உள்ளும் உருவேற்றி
நுவல்தல் மட்டும் வேறுபட்டே
அத்துணை குணமும் நிறமின்றி காட்ட
உயர்வும் காணாது தாழ்வும் வீழாது
இயல்பும் மாறாது ஜீவன் என்றே
ஓம்பும் திறமதனை உடன் பெற்று
கடைபட்ட உயிரெனினும் தணியாது
மறைபொருள் புரியாது உலவி
சூதும் சூழ்ந்து சுரத்தில் பொதிய
தவமென்னும் உக்கிரத்தில் இறுதியாய்
அடர்ச்சுவடு ஆடிப்பரித்து மேவ
இன்னும் விடாது விலங்கிடை அணியும்
புதைந்து மையமாய் உவர் பெறின்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நுவல்தல் மட்டும் வேறுபட்டே -அருமை... தொடர வாழ்த்துக்கள்...

Mubeen Sadhika said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்