Thursday, January 9, 2014

அகம் மற்றும் ஒரு முகம்

வளைந்தன கோடுகள்
முனை உரசி சரிய
மேலும் உயர்ந்து சரிந்து
கீழும் வீழ்ந்து நுடங்கி
வட்டமோ ஆரமோ
வில்லும் அல்லாமல்
கொடியும் போலே
விழியும் நேராய்
நிமிர்ந்த செருக்காய் நாசியும்
சற்றும் குவிந்து
இரு பிறை நெளிவென
இதழ்களும் பிரிந்து
இறுகும் கன்னம் தழைய
அகலும் நுதலும்
அடர் கூந்தல் கலைய
ஆடியின் பிம்பமாய்
சுடர் பொலிந்த முகமும்
சித்திரத்தில் வேறாய்
மெய்யென மறைத்து
மற்றை யாதொரு
அகத்தில் துலங்கிடவே

4 comments:

சின்னப்பயல் said...

முயங்கிய நிலையில் மயக்கமா..?! :)

ஜமாலன் said...

அகத்தில் உள்ள ஒரு முகத்தை வரையும் ஓவியம் கவிதையாகி உள்ளது. அருமை. அந்த அகத்தில் உள்ள முகம் வழமையான சங்ககாலம் தொட்ட அழகியலை தாண்டாத ஒரு ஓவியப்பிம்பமாக இருப்பது என்பது அந்த அகம் பற்றிய ஒரு விமர்சன்மாக அல்லது தமிழ் அகத்தின் அழகியல் ஒழுங்குபற்றிய ஒரு விமர்சனமாக மாறியிருந்தால் கவிதை மற்றொரு தளத்தில் பரிமாணம் கொண்டிருக்கும். ஆனாலும் தமிழ் அகத்தின் அழகியல் என்பதில் உள்ள ஒழுங்கின் வன்முறை பற்றிய ஒரு அறிக்கையாக இக்கவிதையை வாசிக்கலாம் எதிர்மறையாக வாசித்தால்.

Mubeen Sadhika said...

உங்கள் வாசிப்பு அபாரமானது. உற்சாகம் தரக்கூடியது நன்றி ஜமாலன்.

Mubeen Sadhika said...

நன்றி சின்னப்பயல்.