Sunday, May 11, 2014

தகிக்கும்...

நீரில் மறைந்தது பிறை
வளைந்தது நெளிந்தது
ஆடியின் உயிராய்
தகித்தது
வான் கரைந்தது நீர்மமாய்
ஒளித் துண்டு உதிர்த்து
கருத்தது கலைய
வளியும் அசைத்தது
அலையை சுழித்தது
வட்டமாய்ப் பெருக்கி
நிலவைத் தொட்டும்
அண்டாமலும்
உயரத்து சிமிட்டும்
ஆழத்து உருகும்
திங்களின் உடல்
எட்டி நின்று
காயும் தண்ணென்று

1 comment:

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்