Sunday, May 25, 2014

சாரியை வாசகங்கள்

அள்ளெனும் சாரியை ஈராய் வந்த வாசகம்:

சேர்தலும் விலக்கும் இரங்கலும்
நல்லிழைதலும் என்றே கூடி
ஒருங்கு குவித்த எம் நிலை
தவிப்பில் வாடி சுருங்கும் காயமாய்
புரிந்திட்ட ஒழுங்கென இயைபென்றானதுவே

அன்னெனும் சாரியை ஈராய் வந்த வாசகம்:

வண்ணத்துப் பூச்சியாய் பறந்து
கண்ணிலும் அகத்திலும் ஆடி எம்
துயர்காணாது தன் விருப்பில் சுமை
கொண்டே விதிரும் சிற்றுயிராய்
சிறகசைத்து திணையாகும் எனவே விதிக்க

அள் ஈராய் மறுவாசகம்:

கரைந்தனள் புலம்பினள் விழிபெருக்கினள்
எனும் காட்சியாய் ஏட்டில் பதியும்
பாவை அன்ன திரியும் உடம்போடு
எவ்விலங்கும் ஈனும் உணர்வினதாய்
விடுத்து புலன் விளக்கும் புதுநெறி பாற்பட்டே

அன் ஈராய் மறுவாசகம்:

எதிர்த்தனன் விதித்தனன் சூடினன்
என்று வர்ணிக்கும் பொருளில்
விரிந்த வடிவாய் ஏற்ற
உறுதியோடு திறம்பட்ட புனைவென
அலையும் மெய்யாய் ஏந்திய இவ்வண்ணம்

அள் ஈராய் ஒரு வாசகம்:

தொடர்புற்றனள் அலையாய் தன்
வடிவும் உருமாற்றி மனமும் விழியாய்
புள்ளியில் கோர்த்து செரிக்கும்
பல்வினை தாண்டி வலி கூட்டி
வளி அடைந்த வானமாய்

அன் ஈராய் மேல் வாசகம்:

குழவி போல் நீரில் அலையும் ஒரு
பயனும் காணாமல் நீந்தி தவிக்கும்
இருப்பில் கடனாய் நின்ற ஒலியாகி
சர்வமும் சரண்டையப் பணியும்
சீவனாய் ஆனதேனோ

No comments: